ஓபிஎஸ்க்காக ஆற்றையே ஓடையாக மாற்றிய அதிகாரிகள்: லெட்சுமிபுரத்தில் போராட்டம்!
கிணறு விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக, பொதுப்பணித்துறையினர் ஒரு ஆற்றையே ஓடையாக மாற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தேனி: கிணறு விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக, பொதுப்பணித்துறையினர் ஒரு ஆற்றையே ஓடையாக மாற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிணற்றை ஒப்படைக்கக்கோரியும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம். இங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் 200 அடி ஆழத்தில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மக்கள், கிணற்றை கிராமத்திற்கு வழங்கக்கோரி சாலைமறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு என தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களுக்கு தருவதாக கூறிவிட்டு..
இதைத்தொடர்ந்து லெட்சுமிபுரம் கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

வேறு ஒருவருக்கு விற்பனை
இதனால் நிலத்தை வாங்க கிராம மக்கள் பணம் வசூல் செய்யத் தொடங்கினர். ஆனால், பேச்சுவார்த்தை நடப்பதற்கு முதல்நாளே சுப்புராஜ் என்பவருக்கு, அந்த நிலத்தை ஓபிஎஸ் விற்றது தெரியவந்தது.

கிராம மக்கள் போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இன்று முதல் முதல் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிணற்றை கிராம மக்களுக்கே தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறு ஓடையாக மாற்றம்
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பொதுப்பணித்துறையினர் அங்குள்ள வறட்டாறை ஓடை என மாற்றி பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் குற்றச்சாட்டு
வறட்டாறு மூலம் 13 கண்மாய்கள் நிரம்புகின்றன. சுமார் 74 ஏக்கர் நிலத்தில் இருபோக விவசாயம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வறட்டாறை, பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு ‘வறட்டு ஓடை' என பெயர்மாற்றம் செய்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications