கொளத்தூரில் ரயில்வே மேம்பாலம் என்ன ஆச்சி.. ஸ்டாலின் கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி எஸ்கேப் பதில்
கொளத்தூர் தொகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது என்ன ஆச்சு என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார்.
சென்னை: இன்று கூடிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், வில்லிவாக்கம் தொகுதியில் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, வில்லிவாக்கம் தொகுதியின் திமுக எம்எல்ஏ ரங்கநாதன், வில்லிவாக்கத்தில் விபத்து அதிகம் நடக்கக் கூடிய ஜி.கே.எம். காலனி பட்மேடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பெரம்பூர் ஐ.சி.எப். மற்றும் சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஜி.கே.எம். காலனி கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி 7 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதிபெறப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை என்று புகார் கூறினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனியார் நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மேம்பால பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
-
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது











Click it and Unblock the Notifications