ஐடி சிக்கலில் 4 அமைச்சர்கள்... கிடைக்குமா முன் ஜாமீன்? - வீடியோ
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டு அமைச்சர்கள் உடுமலை ராதா கிருஷ்ணன், காமராஜ், செய்யூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் வருமான வரித்துறையின
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், செய்யூர் ராஜூ, மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளனர். அதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்க உள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி, அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதனையடுத்து இவர்களிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பல மணிநேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியிலிருந்து விலக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் கோரி வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் இடையே மோதல் உருவாகியுள்ளது.
மேலும் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களைக் கொண்டு அமைச்சர்கள் உடுமலை ராதா கிருஷ்ணன், காமராஜ், செய்யூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர உள்ளனர். முன் ஜாமீன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications