கீழடி அகழாய்வு தமிழக வரலாற்றின் ஒரு பகுதி... அமர்நாத்தே ஏன் தொடரக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி
கீழடி அகழாய்வு பணிகளை, அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனே ஏன் தொடரக்கூடாது என தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மதுரை: கீழடி அகழாய்வு என்பது வரலாற்றின் ஒரு பகுதி. கீழடி அகழாய்வு சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உண்டு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழிமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் 3ம் கட்ட ஆய்வுகள் துவங்கும் நிலையில், கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திற்கு மாற்றினர். தற்போதுள்ள ஜோத்பூர் தொல்லியல் காப்பாளர் ஸ்ரீராமனுக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை.

பழமையான வரலாற்றை மறைக்கும் வகையிலேயே அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். மாறுதல் உத்தரவை ரத்து செய்து, அவரே கீழடி அகழாய்வு பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, முதலில் அகழாய்வு பணியை துவக்குவதற்கான உத்தரவு அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில்தான் வழங்கப்பட்டது. சட்டப்படி யார் பெயரில் அனுமதிக்கப்பட்டதோ, அவர்தான் அகழாய்வை தொடர முடியும் என்றார்.
தொல்லியல் துறை சார்பில், பணிமாறுதலை எதிர்த்து பெங்களூரு தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையிட்டுள்ளார். தொல்லியல் துறை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அகழாய்வு பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடக்கிறது. பணிமாறுதல் என்பது வழக்கமானதுதான் என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கீழடி அகழாய்வு என்பது வரலாற்றின் ஒரு பகுதி. கீழடி அகழாய்வு சிறப்பாக நடக்க வேண்டும். நல்ல அதிகாரி இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உண்டு. இது எல்லோருக்கும் உள்ள அக்கறை. ஏன் அவரே கீழடியில் பணியை தொடரக்கூடாது.
இதுகுறித்து தொல்லியல் துறையே நல்ல முடிவெடுக்கலாமே, எனக்கூறிய நீதிபதிகள், கீழடி அகழாய்வு தொடர்பான மற்றொரு மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு கூறி விசாரணையை ஆகஸ்ட் 17க்கு ஒத்திவைத்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications