ஜெயலலிதாவின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்தது ஏன்? பின்னணியில் முக்கிய காரணங்கள்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி அவரது உடலை எரித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் புதைத்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும்.
இதற்கான காரணம் குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் சில முக்கிய காரணங்களை இதன் பின்னணியில் குறிப்பிட்டனர்.

முதல் காரணம், முதல்வராக பதவியில் இருந்தபோதே மரணமடைந்த தமிழக முதல்வர்கள் மொத்தம் மூன்று பேர். அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாதான்.
பதவியிலிருந்தபோதே காலமான மற்ற இரு முன்னோடிகளையும் புதைத்துள்ளனர். அதேபோல ஜெயலலிதாவின் பூத உடலையும் புதைப்பதே முறை என்பதால்தான் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஒரு நிர்வாகி கூறினார். ஆனால் வேறு சில காரணங்களை அடுக்குகிறார்கள் வேறு சில நிர்வாகிகள்.
அதில் ஒரு முக்கியமான காரணம், மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி அருகேயே ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்க வேண்டும் என்பதே இயல்பான அதிமுகவினர் விருப்பம். ஜெயலலிதாவும் கூட ஒருவேளை அதையே கடைசி விருப்பமாகவும் கூறியிருக்க கூடும். இதற்காக ஜெயலலிதாவின் உடலை எரித்து அஸ்தியை கொண்டு அங்கு சமாதி எழுப்பியிருக்கலாம்தான். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.
ஜெயலலிதாவின் பூத உடலை எரித்து சாம்பலாக்க பெசன்ட்நகர் அல்லது மைலாப்பூரிலுள்ள மின் மயானத்தைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், அவரது உடலை அவ்வளவுதூரம் கொண்டு செல்வதில் பாதுகாப்பு சிக்கல், டிராபிக் நெருக்கடி, மக்கள் கூட்டத்தால் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உருவாகும் என்பதால் பூத உடலை புதைக்க முடிவு செய்தனர் என்று கூறினார் ஒரு அதிமுக நிர்வாகி.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications