தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

இன்னும், நாலைந்து மணி நேரத்தில் லோக்ஆயுக்தா மசோதா எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். பாஜகவிற்கு சில அஜென்டா வைத்திருப்பார்கள். அது அந்த கட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் நான் கருத்து கூற முடியாது. பொதுவாக ஒரு கட்சி தலைவர் என்பவர் தங்கள் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்வது வழக்கம். அமித்ஷாவும் அப்படிதான் தமிழகம் வருகிறார் என்றார்.
பாஜக-அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஜெயக்குமார் அளித்த பதில்: கூட்டணி யாருடன் யார் என்பதெலெ்லாம், தேர்தல் நேரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகள்தான் முடிவு செய்யும்.
அவர் ஏன் அவசரப்பட்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. 1967லேயே காங்கிரசுக்கு தமிழகத்தில் சமாதி கட்டியாகிவிட்டது. இனி காங்கிரசுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லை. இப்போது தேவையில்லாமல் அனுமான அடிப்படையில் கருத்து கூறுவதை ஏற்க முடியாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு 5 வருட அவகாசம் தர வேண்டும். இன்னும் 3 வருடம் அவகாசம், இருக்கும் நிலையில், இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்பதே அதிமுக வாதம். இதைத்தான் சட்ட ஆணைத்தில் எடுத்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications