பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலையில் கைரேகைகள் சிக்கியது- செல்போன் அழைப்பு குறித்து விசாரணை

சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் கைரேகைகள் கிடைத்துள்ளன.அவரது அலைபேசியில் அவருக்கு வந்த, அவர் அழைத்த எண்கள் கிடைத்துள்ளன. அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம் என, சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை சிறுசேரி டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் சம்பவ இடத்தை நேற்று முன்தினம் மாநில டி.ஜி.பி., ராமானுஜம் பார்வையிட்டார். அந்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவியுடன் ஆளில்லா விமானம் மூலம் இரண்டாவது நாளாக நேற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன.
சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்கள் விசாரணையை நேற்று துவக்கினர். கூடுதல் எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் நேற்று சிறுசேரியில் சடலம் கிடைத்த பகுதியில் சோதனை நடத்தினர். அதில் பிளேடு, தலைமுடி, சிகரெட் துண்டுகள், பழைய "சிம் கார்டு'கள், துணிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டன.
மேலும், உமா மகேஸ்வரியின் படத்தை காட்டி 81 ஆட்டோ ஓட்டுனர்கள், மாநகர குளிர் சாதன பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் உமா மகேஸ்வரியுடன் பணிபுரிந்த சக பணியாளர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
உமா மகேஸ்வரியின் அலைபேசிக்கு வந்த அழைப்புகள், அவர் தொடர்பு கொண்ட எண்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் வரவழைத்து விசாரித்தனர். உடன் பணியாற்றிய தோழிகளுக்கு தெரிந்த திருப்போரூரைச் சேர்ந்த பெண்ணிடமும் விசாரித்தனர்.
சிறுசேரியின் நுழைவுபகுதி மற்றும் கேளம்பாக்கத்தை சுற்றி சாதாரண உடைகளில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பவ இடத்தில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன. உமா மகேஸ்வரியின் அலைபேசிக்கு வந்த அழைப்புகள், அவர் அழைத்த எண்கள் ஆகியவற்றை பற்றி ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.
இந்த நிலையில் டி.சி.எஸ் பணியாளர்கள் மத்தியில் நேற்று குறுஞ்செய்தியாக பரப்பப்பட்ட தகவலில்,"உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. அதனால், நமது நிறுவனத்தை சேர்ந்த பெண்கள், இரவு நேர பணிக்கு வரும் போது, அலுவலக வாகனங்கள் வராமல் வெளியில் செல்ல வேண்டாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications