விபத்தில் துண்டான கை! 1 மணி நேரத்தில் பட்டுக்கோட்டை டூ திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பெண் ஒருவரின் கை துண்டான நிலையில், அவரை ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் திருச்சி அழைத்துச் சென்றுள்ளார் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரமாவது ஆகக் கூடும் என்ற நிலையில், மிகத் துணிச்சலாகவும் சாதுர்யமாகவும் ஆம்புலன்ஸை இயக்கியுள்ளார் ஓட்டுநர் ராசிக்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

துண்டான கை
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே நேற்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் இந்திராணி என்பவரின் கை முழுவதுமாக துண்டானது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டதுடன் விபத்தில் துண்டாகி கிடந்த கையையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இந்திராணிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், துண்டான கையை இணைக்க வேண்டும் என்றால் இரண்டரை மணி நேரத்திற்குள் திருச்சிக்கு மேல்சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தமுமுக ஆம்புலன்ஸ்
இதையடுத்து மதுக்கூர் கிளை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, விபத்தில் கையை இழந்த இந்திராணி திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார். கூடவே துண்டாகி கிடந்த இந்திராணியின் கையும் பாதுகாப்பான முறையில் திருச்சி எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்குள் திருச்சி செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசிக் அகமது ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் திருச்சி சென்றடைந்தார்.

மருத்துவர்கள் பாராட்டு
இதனிடையே திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணிக்கு உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து துண்டான கையை ஒட்ட வைத்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசிக் அகமதுவின் துணிச்சலான இந்த நடவடிக்கையை அறிந்த மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இதேபோல் விபத்தில் கையை இழந்த இந்திராணியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

மனிதநேய சேவை
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை பல இடங்களில் கட்டணமின்றி ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது கூட மனிதநேய அடிப்படையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதாக அருணா ஜெகதீசன் ஆணையமே பாராட்டவும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications