நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை
தேனி: கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் என பொட்டிபுரம் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதே மக்களின் இந்த ஆவேசத்திற்கு காரணம். 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ரூ.1500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கின.

மலையையே குடைந்து நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நோள்களும் ஏற்படும் என கூறி வழக்கு தொடரப்பட்டது. இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய இணையமச்சர் ஜிதேந்திர சிங் நியூட்ரினோ மையம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்தாலே நிலத்தடி நீர் குறைகிறது. இச்சூழலில் 2 கிமீ தூத்திற்கு மலையை குடைந்து அணு ஆய்வு மையம் அமைத்து 50,000 டன் எடையுள்ள மின்காந்தத்தை வைத்து ஆய்வு செய்ய போகிறோம் என கூறுகிறார்கள். இதனால் எங்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளோம். மலையை குடைவதலால் அந்த அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய அழிவை நாங்கள் சந்திப்போம் என்ற பயம் எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளனர். மேலும் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை செயல்படுத்த நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடும் என்பதால், கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் வாரியம், வனவிலங்குகள் நலவாரியம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அனுமதியை மட்டுமே வைத்து கொண்டு, திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications