நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை
தேனி: கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் என பொட்டிபுரம் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதே மக்களின் இந்த ஆவேசத்திற்கு காரணம். 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள, அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ரூ.1500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கின.

மலையையே குடைந்து நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நோள்களும் ஏற்படும் என கூறி வழக்கு தொடரப்பட்டது. இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய இணையமச்சர் ஜிதேந்திர சிங் நியூட்ரினோ மையம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்தாலே நிலத்தடி நீர் குறைகிறது. இச்சூழலில் 2 கிமீ தூத்திற்கு மலையை குடைந்து அணு ஆய்வு மையம் அமைத்து 50,000 டன் எடையுள்ள மின்காந்தத்தை வைத்து ஆய்வு செய்ய போகிறோம் என கூறுகிறார்கள். இதனால் எங்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளோம். மலையை குடைவதலால் அந்த அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய அழிவை நாங்கள் சந்திப்போம் என்ற பயம் எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளனர். மேலும் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை செயல்படுத்த நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடும் என்பதால், கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் வாரியம், வனவிலங்குகள் நலவாரியம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அனுமதியை மட்டுமே வைத்து கொண்டு, திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications