ஓபிஎஸ் மகன் ஓபிஆரையே ஓரம்கட்டிய தேனி மாஜி கவுன்சிலர்! மஞ்சளுடன் மாடியில் காய்ந்த சிறுத்தை தோல்-ஷாக்
தேனி: தேனியில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பியாக உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அவரை விஞ்சும் வகையில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் சிறுத்தையில் தோல் மஞ்சள்பூசப்பட்டு மொட்டை மாடியில் காயவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டங்களில் ஒன்றாக தேனி உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வனவிலங்குகளின் தோல் உள்பட பிற பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர்.

வனத்துறை சோதனை
இந்நிலையில் தான் தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்டு அம்மாபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீட்டில் சிறுத்தையின் தோல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி வனத்துறை அதிகாரிகள் அம்மாபட்டி கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர்.

மஞ்சள் பூசப்பட்ட சிறுத்தை தோல்
அப்போது மாடியில் சிறுத்தையின் தோல் மஞ்சள்தூள் பூசப்பட்டு காயவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த சிறுத்தையின் தோலை வனத்துறையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் சிறுத்தையின் தோல் துரைப்பாண்டி -வேல்மணி தம்பதியின் வீட்டில் கைப்பற்றப்பட்டு தெரியவந்தது. இதில் மனைவி வேல்மணி வடபுதுப்பட்டி ஊராட்சி 13வது வார்டு உறுப்பினராக இருந்ததும் தெரியவந்தது.

வேட்டையாடப்பட்டதா?
இதனால் துரைபாண்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் தான் சிறுத்தை எங்கு வேட்டையாடப்பட்டது? எதற்காக வேட்டையாடப்பட்டது? என்பது தொடர்பான பிற விபரங்கள் வெளியாகும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் துரைபாண்டி பற்றிய விபரங்களை சேகரித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரவீந்திராந் எம்பி விவகாரம்
முன்னதாக தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியும், ஓ பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சிறுத்தை இறப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அதாவது தேனி பெரியகுளம் அருகே உள்ள ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிலத்தில் மின்வேலியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவீந்திர நாத் எம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டில் இருந்து சிறுத்தையின் தோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications