திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள முக்கிய கடற்கரைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாபநாசம்
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு தலையணையில் புத்தாண்டு நாளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது. திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம்
குற்றாலத்தில் உள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் இன்று யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்த குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ராமேஸ்வரம்
2022ஆம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் -தமிழக அரசு உத்தரவின்படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி
இதேபோன்று உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார். தனுஷ்கோடி பகுதிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள்-பக்தர்கள் செல்லவும் போலீசார் புதுரோடு பகுதியில் பேரிகாடு அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர். கடலில் நீராட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications