விபத்தில் சிக்கி முடங்கிய பறவை மனிதன் பால்பாண்டி.. குஞ்சுகளுக்கு மீன் வாங்க முடியாத கவலையில் தவிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பறவை மனிதன் என அழைக்கப்படும் பால்பாண்டிக்கு துணை கமிஷனர் அர்ஜுனன் சரவணன் உதவ முன்வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ளது கூந்தங்குளம். இந்த இடத்தில் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும்.
இந்த சரணாலயத்திற்கு சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த சரணாயலத்தை சுற்றி உள்ள மக்கள் பறவைகளை பாதுகாத்து வருகிறார்கள். இவர்களை காட்டிலும் பறவைகளை பால்பாண்டி என்ற பறவை மனிதனும் பாதுகாத்து வருகிறார்.

குளங்கள்
40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் பல மைல்கள் குளங்களிலும், கண்மாய்களிலும் அலைந்துத் திரிந்து பறவைகள் கட்டியிருக்கும் கூடுகள் பத்திரமாக உள்ளனவா என பார்ப்பதுதான் கணவன், மனைவியின் முழுநேர வேலையாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? பல சமயங்களில் கூடுகளில் இருந்து குஞ்சுகள் எகிறி கீழே விழுந்து விடும். அவைகளால் பறந்து மீண்டும் கூட்டில் ஏற முடியாது.

சிறுவிலங்குகள்
இதற்காகவே காத்திருக்கும் நரி போன்ற சிறுவிலங்குகள் அவைகளை தின்றுவிடும் முன்பு, மீட்டெடுத்து மீண்டும் கூட்டில் சேர்ப்பார் இந்தப் பறவை மனிதன். பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பறவைகள் கூடு கட்டியுள்ளன என்பது இவருக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால், இவரிடம் சொல்லிவிட்டுதான் கூடே கட்டுமோ என நாம் வியக்கும் வண்ணம் இவருக்கும், அந்தப் பறவைகளுக்கும் அத்தனை அந்நியோன்யம் உண்டு. மனிதர்களில் மாமனிதராக வாழும் இவர் ஓர் அபூர்வப் பிறவி.

வழிகாட்டி
இப்படி இயற்கையின் மீது அதீத அன்பு கொண்ட பால்பாண்டி அண்மையில் விபத்தில் சிக்கினார். இதனால் இவரால் வெளியே செல்ல முடியவில்லை. அதாவது சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே ஆகும். இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். காசு இல்லாமல் மீனை எப்படி வாங்குவது என்ற கவலையில் இருந்தார்.

நெல்லை
இந்த நிலையில் இவரது நிலை குறித்து ட்விட்டரில் எழுத்தாளர் எஸ்.கே.பி. கருணா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பால் பாண்டியின் நிலை குறித்து விளக்கி கூறி அவருக்கு உதவிடுமாறு நண்பர்களிடம் கேட்டுக் கொண்டார். இது நெல்லை நகர துணை கமிஷனர் அர்ஜுன் சரவணனின் கவனத்திற்கு சென்றது.

பிளமிங்கோ
இதுகுறித்து அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பால் பாண்டி நெல்லையின் பறவை மனிதன். அவருடன் சேர்ந்து Bird watching சென்றுள்ளேன். நெல்லைக்கு பிளமிங்கோ வந்துள்ளதை அறிந்தபோது மணிக்கணக்கில் தேடி காண்பித்தவர். நண்பர்கள் உதவியுடன் ஒரு கணிசமான தொகையை அவருக்கு அளிக்கிறேன். முன்னெடுப்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications