பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா? இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்!
நெல்லை: சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநரான பா ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை அவர் கடுமையாக விமர்சித்தார்.
தமிழர்களின் கட்டடக்கலையை உலகளவில் பறைசாற்றிய மன்னர் ராஜ ராஜ சோழனை அவன், இவன், அயோக்கியன் என்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார் ரஞ்சித். சோழ மன்னரை விமர்சித்த ரஞ்சித்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்ணடிமை உண்மை
அதே நேரத்தில் அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜ ராஜ சோழன் காலத்தில் பெண்ணடிமை இருந்தது உண்மை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ய தடை
இந்நிலையில் ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்த ரஞ்சித் மீது பல காவல்நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்ஜாமீன் கோரிய இயக்குநர் ரஞ்சித்தை வரும் 19ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அணுக்கழிவுகளை பற்றி ஏன் பேசவில்லை?
இந்நிலையில் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயக்குநர் ரஞ்சித் அணுக்கழிவுகளை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் நிலத்தை பறித்திருப்பாரா?
ராஜ ராஜ சோழனை இன அடையாளமாக பார்க்கிறோம் என்றும் சீமான் கூறினார். மேலும் பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறித்திருப்பாரா என்றும் சீமான் ரஞ்சித் மீது சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications