பாலாற்றில் அணை கட்டினால்..உச்சநீதிமன்றத்தில் வழக்கு!ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
திருவள்ளூர்: பாலாற்றில் அணைக்கட்டும் பணிகளை ஆந்திர அரசு செயலாக்கத்தில் கொண்டு வந்தால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் துரிதப்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டலத்தின் நீர்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கூட்டம், அத்துறையைச் சேர்ந்த அமைச்சர் துரை முருகன் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட15 மாவட்டங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் துரைமுருகன்
இந்த ஆய்வு கூட்டத்தில், நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சக்சேனா, சென்னை மண்டல முதன்மை பொறியாளர் முரளிதரன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.

வெள்ள பெருக்கு
ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், வேலைகளில் உள்ள சுனக்கங்களை கூறியும், பணிகளை விரைவுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவ மழை தொடர்பாக பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைப்போல, இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடாது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

புதிய அணை
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாலாற்றில் அணைக்கட்டும் பணிகளை ஆந்திர அரசு, செயலாக்கத்தில் ஈடுபட்டால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு துரிதப்படுத்தப்படும். ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் அனைத்து ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஓசியில் பயணம் என்பது குறித்து பொன்முடி பேசி, பேருந்தில் டிக்கெட் எடுத்த பெண்ணுக்கு செலவு வைத்திருக்கிறார். எளாவூர் 7 கண் பாலத்தில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications