திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மிகத் திட்டவட்டம்!

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறி பெருமிதம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

 ராஜீவ் கொலையாளிகள்: முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி ராஜீவ் கொலையாளிகள்: முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

 எல்.முருகன்

எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற மத்திய அரசு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார். காசிக்கும் தமிழகத்திற்கும் கலாச்சார பண்பாட்டு உறவு காலம் காலமாக இருந்து வருவதாக கூறிய அவர், காசிக்கும் தென்காசிக்கும், காசிக்கும் சிவகாசிக்கும், காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என இப்படி ஒரு பெரிய பந்தம் நீடித்து வருவதாக தெரிவித்தார்.

 காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம்

காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள பந்தத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், எதைச் சொல்கிறதோ அதைத் தான் செய்து வருவதாக மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார். இதனிடையே மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களால் இந்தியாவில் புதிய தொழில்முனைவோர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள் என்றும் உலகிலேயே அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடு இந்தியா தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசு

இந்தியா வல்லரசு

இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர், 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும் என நம்பிக்கை பொங்கக் கூறியிருக்கிறார். இது பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம் எனத் தெரிவித்த அவர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார். இதனிடையே மத்திய அரசு நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்தி அதில் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

பாஜக சச்சரவு

பாஜக சச்சரவு


தமிழக பாஜகவில் திருச்சி சூர்யா -டெய்சி சரண் இடையே நடந்த அநாகரீக வார்த்தைப் போர், காய்த்ரி ரகுராம் நீக்கம், யூடியூப்களில் பேசுவதற்கு வாய்ப்பூட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister of State L. Murugan has clearly stated that India will become a superpower on the 100th Independence Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X