அண்ணாமலையார் கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்த துவாரபாலகர் சிலையின் முகத்தில் துளை! பக்தர்கள் வேதனை
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் முகத்தில் துளையிட்டு சிசிடிவி பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையால் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோயில்
குறிப்பாக அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள துவாரபாலகர் சிலையின் முகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். கோபுரத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் துவார பாலகர் சிலையின் முகத்தில் தொலையிட்டு கண்காணிப்பு கேமராவை பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியதால் கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஊழியர்கள் உடனடியாக துவாரபாலகர் முகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி சிலையின் அருகில் மாற்றி பொருத்தியுள்ளனர். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

பாரம்பரியம்
இது போன்று தவறுகள் செய்தால் கோவில் பாரம்பரியம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன் சிலைகளின் அமைப்பும் பாழாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். துவார பாலகர்கள் என்பவர்கள் கோயில் வாயில்களின் இரு புறங்களிலும் அமைக்கப்படும் காப்போர் சிலைகளாகும். பொதுவாக இவர்கள் போர் வீரர்களை போல் தோற்றம் கொண்டவராக இருப்பர்.

ஆண், பெண் பாலரும்
ஆண், பெண் இருபாலரும் துவாரபாலகர்களாக இருப்பர். துவாரபாலகர்களைக் குறிக்கும் சிற்பங்கள், இந்து, பௌத்த சமயங்கள் பரவியிருந்த தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்துக் கட்டடக் கலையிலும், பௌத்த கட்டடக் கலையிலும் துவாரபாலகர்களின் சிற்பங்கள் முக்கியமான கூறுகளாகக் காணப்படுகின்றன.

துவார என்றால் என்ன?
துவார என்பது வாயில் என்றும் பால என்பது காப்போன் என்றும் பொருள்படும். துவாரபாலகர்களின் படிமங்கள் திருக்கோயில்களின் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வங்கள் ஆகும். இவர்கள் தெய்வங்களை பாதுகாப்பவர்கள் என்பதும் ஒரு ஐதீகம் உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications