கணவர் இல்லாதபோது வீட்டில் காதலனுடன் உல்லாசம்.. கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லியதால் காதலன் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

செங்கம்: செங்கம் அருகே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி காதலியானவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் (25). இவரது கணவர் அஜீஸ். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (21) தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக இருந்து வந்தார். திருமணம் ஆகாத பூபதிக்கும் அம்ரின் ஆகிய இருவருக்கும் இந்த நிலையில் yoyo செயலி மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

அம்ரின்

அம்ரின்

அம்ரின் பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும் கூறியதால் இருவரும் கடந்த எட்டு மாதமாக yoyo செயலி மூலம் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 - ஆம் தேதி தனது வீட்டில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

பூபதிக்கு உண்மை

பூபதிக்கு உண்மை

அம்ரினின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் செங்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அவர் பூபதியை அழைத்துள்ளார். அப்போதுதான் அம்ரினுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பூபதிக்கு தெரியவந்தது.

பூபதியுடன் இரு நாட்கள் உல்லாசம்

பூபதியுடன் இரு நாட்கள் உல்லாசம்

மேலும் அம்ரினின் கணவர் வீடு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால் தனது வீட்டிலேயே தங்குமாறு பூபதியை கூறியுள்ளார். அப்போது பூபதியுடன் தனது வீட்டிலேயே இரண்டு நாட்கள் அம்ரின் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாகக் கூறி வெளியே சென்றார் அம்ரின்.

சேலையில் தூக்கு

சேலையில் தூக்கு

அப்போது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அம்ரினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த மின்விசிறியில் அம்ரினின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்ட அம்ரின், புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார்.

பறிமுதல்

பறிமுதல்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் அம்ரினை திருமணம் செய்து கொள்வதற்கு பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

தங்கள் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பூபதியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளார்கள். அம்ரினுக்கு திருமணம் ஆனது தொடர்பாக பூபதி வாக்குவாதம் செய்த போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி அம்ரினே பூபதியை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் அம்ரினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+