10-ம் வகுப்பு மாணவனுடன்.. 35 வயதுடைய பெண் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு.. திருவாரூரில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, எரவாஞ்சேரி அருகே வசித்து வருபவர் பாலகுரு. இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். 15 வயது சிறுவன் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே தெருவில் 35 வயதுடைய பெண், கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். அந்த பெண் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணியில் உள்ளார்.

இருவருக்கும் பழக்கம்

இருவருக்கும் பழக்கம்

இந்த நிலையில் 35 வயதுடைய பெண்ணுக்கும், 15 வயதே ஆன சிறுவனுக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் தனது மகனை கண்டித்தனர். இதனால் மகனை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கவைத்தனர்.

மாயமான சிறுவன்

மாயமான சிறுவன்

அங்கிருந்து பள்ளிக்கு சென்று வரும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவன் தனது சித்தி வீட்டில். இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் அவனை காணவில்லை...

சிறுவனுடன் தலைமறைவான பெண்

சிறுவனுடன் தலைமறைவான பெண்

இதுகுறித்து சிறுவனை காணவில்லை என்று எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் என அவனது தந்தை பாலகுரு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது., அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுவன் மற்றும் 35 வயதுடைய பெண்ணை பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.

'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு

'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு

தொடர் விசாரணையில். ஆட்டோ டிரைவர் அவர்கள் இருவரையும் 'பூந்தோட்டம்' என்ற ஊரில் இறக்கி விட்டு வந்ததாக கூறியுள்ளார்.. இதனை தொடர்ந்து எரவாஞ்சேரி காவல்துறையினர் சிறுவனை கடத்தியதாக 35 வயதுடைய பெண் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

போலீசார் வலைவீச்சு

போலீசார் வலைவீச்சு

அந்த பெண்ணின் செல்போன் எண் 'சிக்னல்' கொண்டு, அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய பெண் 15 வயது சிறுவனுடன் தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+