"திமுகவின் விருப்பம் இதுதான்" சட்டமன்ற இருக்கை விவகாரம் குறித்து ஒரே போடாக போட்ட நாஞ்சில் சம்பத்!
திருவாரூர்: அதிமுக ஒன்றுபட திமுக விரும்பியதால் தான் சட்டமன்றத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் அருகருகே இருக்கை வழங்கப்பட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று இரு தரப்பும் முட்டி மோதி வரும் நிலையில், சட்டமன்றம் கூடியது.
இதனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விதிகளின் படி இல்லை என்று அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் - இபிஎஸ் அருகருகே அமரும் நிலை உருவாகியது.

ஓபிஎஸ் தீவிரம்
ஆனால் சட்டசபையில் ஓபிஎஸ் அருகில் அமர்வதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதன் காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை இபிஎஸ் புறக்கணித்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ்-க்கு டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அண்மைக் காலமாக ஓபிஎஸ் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்றன.

பாஜக காத்திருக்கிறது
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவின் நாஞ்சில் சம்பத் பேசுகையில், " மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரேவை பிரித்தது பாஜக தான். அந்த கட்சியின் வில்லுக்கும் அம்புக்கும் இரு தரப்பினர் இடையே சண்டை நடப்பது போல் தமிழகத்தில் இரட்டை இலைக்கு சிக்கல் வர வேண்டுமென மத்திய பாஜக காத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றுபட்ட அதிமுக
ஆனால் அதிமுக ஒன்றுபட வேண்டுமென திமுக விரும்புகிறது. அதனால் தான் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து, சமீபத்தில் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்தார்.

மு.க.ஸ்டாலின் பற்றி நாஞ்சில் சம்பத்
இதே போல் இந்தியா முழுவதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தேவை தமிழகத்தோடு நின்று போவதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவைப்படும் காலம் இது என்று தெரிவித்தார். அதிமுகவை ஒன்றிணைக்க திமுக விரும்புவதாக நாஞ்சில் சம்பத் பேசிய கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications