திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அசைவ உணவை சாப்பிட்ட கும்மிடிப்பூண்டி பக்தர்களால் பரபரப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே திறந்த வெளியில் உட்கார்ந்து கொண்டு முட்டை குருமா, வெஜ் பிரியாணியை சாப்பிட்டதாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
திருமலையில் பக்தர்கள் அசைவ உணவுகள், மதுபானங்கள், பீடி, போதை வஸ்துகள், பான் பராக், குட்கா, சிகரெட், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் உள்ளிட்டோரை அலிபிரி செக் போஸ்ட்டில் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்த பிறகே அவர்களை அனுமதிக்கிறார்கள்.

அவர்கள் கொண்டு வரும் லக்கேஜுகளும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக பேருந்துகளில் செல்வோர் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் சோதனை செய்யும் இடத்திற்கு செல்ல வேண்டும். அதுவரை பேருந்து அவர்களுக்காக காத்திருக்கும். சோதனைகளை முடித்துக் கொண்டு அவரவர் வந்த பேருந்தில் ஏறி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஒரு வேளை அந்த சோதனையில் பீடி, சிகரெட், மதுபாட்டில் உள்ளிட்டவை இருந்தாலும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள். இந்த நிலையில் திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகே உள்ள ராம்பகீச்சா (Ram Bageecha) பேருந்து நிலையம் அருகே திறந்தவெளியில் அமர்ந்து அசைவ உணவுகளை பக்தர்கள் 28 பேர் கும்பலாக சாப்பிடுவதாக அங்கிருந்த சக பக்தர்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வந்த போலீஸார் சோதனை செய்த போது அவர்கள் முட்டை குருமா, வெஜ் பிரியாணி உள்ளிட்டவைகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை விசாரித்த போது திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் என தெரியவந்தது. திருமலையில் அசைவ உணவுகளுக்கு தடை இருப்பது தங்களுக்கு தெரியாது என அவர்கள் கூறினர்.
இதையடுத்து கண்காணிப்பு அதிகாரிகள் இனி இப்படி தடை செய்யப்பட்ட உணவை கொண்டு வரக் கூடாது என அவர்களை எச்சரித்தனர். எனினும் அலிபிரி செக் போஸ்ட்டில் சோதனையை தாண்டி இது எப்படி உள்ளே வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications