கட்டு கட்டாய் பணம்! அள்ளி கொடுத்த இசையமைப்பாளர் தேவா! திருச்செந்தூர் முருகன் கோவிலில் உருகி வழிபாடு!
தூத்துக்குடி : தமிழ் துறையில் பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்த இசையமைப்பாலர் தேவா திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில் தான் வெளியிட்ட 'கந்த முகமே' ஆல்பம் மூலம் கிடைத்த மொத்த தொகையையும் கோவிலுக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தேவனேசன். இவர்தான் பிற்காலத்தில் தமிழ் திரையுலகில் பிரபல இசை அமைப்பாளராக வளம் வந்த இசையமைப்பாளர் தேவா.
1989 ஆம் வருடம் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தற்போது வரை இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா
வைகாசி பொறந்தாச்சு, புது மனிதன், வசந்தகால பறவை,பாட்ஷா, ரசிகன், ஜல்லிக்கட்டு காளை, தேவா ,நாடோடி மன்னன், அவ்வை சண்முகி, காதல் கோட்டை, அருணாச்சலம், குஷி, சிட்டிசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தது தேவா தான்.

ரசிகர்கள் உற்சாகம்
ரஜினி,விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் விஜயகாந்த் தனுஷ் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி படங்களை முக்கிய பங்காற்றியதோடு திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்துள்ளார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா,அடிதடி, மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் இடம் பெற்ற பாடல்களில் இசையமைப்பாளர் தேவாவாகவே தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

கானா பாடல்கள்
தேவா என்றாலே கானா பாடல்கள் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் அதே நேரத்தில் மெலோடி பாடல்களையும் அள்ளிக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். தற்போது அவ்வளவாக திரைப்படங்களை பணியாற்றாத நிலையில் இசை மற்றும் பிற ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

சுவாமி தரிசனம்
இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் தேவா உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திருச்செந்தூர் முருகப் பெருமானுக்காகவே கந்த முகமே என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் இதில் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் மூலம் கிடைத்த மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழங்கி உள்ளதாக கூறினார். மேலும் இனிவரும் பணம் மொத்தத்தையும் முருகனுக்கே வழங்குவேன் என கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications