எ.வ.வேலு கொடுத்த பொன்னாடையை வாங்க மறுத்த நிர்மலா சீதாராமன்! அதிகாரிகளிடம் கறார் உத்தரவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வுச் சென்ற மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கிய பொன்னாடையை வாங்க மறுத்து பதில் வணக்கம் மட்டும் தெரிவித்தார்.
தாம் கொடுத்த பொன்னாடையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்க மறுத்தது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது. இருப்பினும் அதனை சமாளித்தவாறு தனது வேதனையை வெளிப்படுத்தாமல் நிர்மலா சீதாராமன் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் தான் ரெய்டு நடந்து முடிந்துள்ள நிலையில் மத்திய அமைச்சரை வாஞ்சையோடு அவர் வரவேற்கச் சென்று இப்படி தர்ம சங்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ஆய்வு செய்யச் சென்ற நிர்மலா சீதாராமனிடம், பெருமாள் ஊர்வலம் வரும் தெருவில் கழிவுநீர் ஓடுவதாகவும் தெரு அசுத்தமாக உள்ளதாகவும் அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவர் முறையிட்டார். இதனால் டென்ஷனான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, இந்தப் புகார் குறித்து கேட்டறிந்தார்.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் சிரித்துக் கொண்டு நின்றதை பார்த்து கொதித்துப் போன நிர்மலா சீதாராமன், நான் ஒன்றும் கேலி கிண்டலாக பேசுகிறேன் என நினைத்துவிடாதீர்கள் என கறார் காட்டினார்.பெருமாள் ஊர்வலம் வரும் தெருவை சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சிரித்தவாறு பேசி அந்தச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். புரோகிதர்களுக்கு அரசு அளந்து ரூ.3,000 ஊதியம் கொடுப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன் அதற்கு வேறு காரணம் இருப்பதாகவும் சூசகமாக தமிழக அரசை சாடினார்.












Click it and Unblock the Notifications