'பயப்படாதீங்க'.. தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது.. கொங்கு நாடு கேள்விக்கு கனிமொழி பொளேர் பதில்
தூத்துக்குடி : கொங்குநாடு சர்ச்சைக்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது , தமிழ்நாட்டை பற்றி கவலை பட வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசவிரோத சக்திகள் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended Video
பிரபல தமிழ் ஊடகத்தில் வந்த ஒரு செய்தியில் மத்திய அரசு கொங்கு நாடு என்று கோவையை தனியாக பிரித்து தனி மாநிலம் அமைக்கப்போவதாக கூறியிருந்தது.
இப்படி ஒரு திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் முற்றிலும் தவறான அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு சிலர் கொங்கு நாடு கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

வாய்ப்புகள் இல்லை
நேற்று ட்விட்டரில் கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வைரலானது. கொங்குநாடு தனிமாநில கோரிக்கை குறித்து ஆளும் திமுக அரசு இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு கட்சிகளுமே ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தை தனிமாநிலமாக ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது,.

யாரும் பிரிக்க முடியாது
ஏனெனில் இரு கட்சிகளுமே எந்த காலத்திலும் மாநில பிரிவினையை ஆதரித்தது இல்லை. இப்படியான கோரிக்கைகளை பாஜகவினர் மட்டும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள். இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்பி கனிமொழி தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது , தமிழ்நாட்டை பற்றி கவலை பட வேண்டாம் என்றார்.

மாநில உரிமைகள்
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய மாநில உரிமைகள் மற்றும் நலன்களுக்காக திராவிட முன்னேற்ற கழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

ஒன்றிய அரசு
அப்போது செய்தியாளர் ஒருவர் , மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதால் , தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கபோவதாக செய்திகள் வருகிறேதா என்றார். அதற்கு கனிமொழி, தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. யாரும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.

யூனியன் ஆப் கவர்ன்மெண்ட்
மத்தியில் இருப்பது நிச்சயமாக ஒன்றிய அரசு அரசு தான். ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்திலே union of government என்று தான் உள்ளது. அதில் ஒன்றும் தவறு இல்லை. இந்த வார்த்தை நாட்டுக்கு எதிரானதும் இல்லை என்றார்.

கனிமொழி பதிலடி
அப்போது மற்றொரு செய்தியாளர், தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் தென்படுகின்றன என்று எல் முருகன் அண்மையில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தார். இப்போது ஆளுநர் நேரில் போய் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கனிமொழியிடம் கேட்டார். அதற்கு கனிமொழி எம்பி, தமிழகம் பாதுகாப்பானவர்களின் கையில் இருக்கிறது. ஆகவே தமிழகத்தின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications