வேலூருக்கு ஹேப்பி நியூஸ்.. குஷியில் துள்ளும் சென்னை, பெங்களூர்வாசிகள்.. விரைவில் வருகிறது அறிவிப்பு
வேலூர்: வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரம் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்து, கடந்த 2016ல், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓடுதளம்: இந்த திட்டத்துக்காக, பொதுமக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினலும் கட்டப்பட்டது.. தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் ரூம் போன்றவையும் அமைக்கப்பட்டன. ஆனால், அனைத்து பணிகளுமே அப்படியே முடங்கிவிட்டன.
கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.. வருடங்கள் உருண்டுவிட்டன.. 10 ஏக்கர் கடைசிவரை கிடைக்கவேயில்லை.. அதனால், இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு ஏர்போர்ட் பணிகளை முடிக்க முடிவானது.. விடுபட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற்றன.. ஏர்போர்ட்டை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் வேலி போட்டுவிட்டால், அனைத்து பணிகளுமே முடிந்துவிடும் என்றார்கள். அதன்படியே அந்த பணியும் சமீபத்தில் முடிந்துவிட்டது.
ஓடுபாதைகள்: பிறகு, முதற்கட்ட சோதனைக்காக விமான போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம், டெல்லியில் இருந்து வேலூருக்கு வந்து, ஓடுபாதையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனைகளை நடத்தியது..
குறிப்பாக, விமானங்கள் இறங்கும் ஓடுதளப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல்வேளையில் சரியாக தெரிகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.. அதேபோல, கன்ட்ரோல் ரூமுக்கு, டவரில் இருந்து சிக்னல் கிடைக்கிறதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. இந்த நேரடி ஆய்வுகள் அனைத்துமே வெற்றிகரமாக முடிந்துள்ளதால், இதன் அடுத்தக்கட்டமாக ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி சோதனை செய்ய போகிறார்களாம்.
வரப்பிரசாதம்: இதற்கு பிறகு, விமானம் இயக்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்டால், இன்னும் 2 மாதத்திற்குள்ளேயே வேலூர் விமான சேவை ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள். இந்த விமான சேவை துவங்கிவிட்டால், பெங்களூர் - சென்னை சென்று வருவதற்கான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ, இந்த ஏர்போர்ட் மட்டும் வந்துவிட்டால், வேலூர் மாவட்டத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications