டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு
டோங்கா : டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு மக்கள் அந்த தீவில் வசித்து வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய தீவுகளாக அந்த நாடு அமைந்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் என்றாலே தீவுப் பகுதிகளிலும் கடலுக்கு அடியிலும் நிலப்பரப்புகளில் ஏராளமான எரிமலைகள் அமைந்திருப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருக்கும் அவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பி பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

எரிமலை வெடிப்பு
டோங்கா நாட்டிலும் ஏராளமான எரிமலைகள் கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி கூங்கோ டோங்கா என்ற தீவின் அருகே கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த எரிமலை கடும் சீற்றத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. கடலுக்குள் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவில் 20 கிலோ மீட்டர் உயர அளவுக்கு எரிமலை வெடித்து சிதறிய சாட்டிலைட் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

கடலில் சுனாமி
எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியிலும் சுனாமி உருவானது. இதையடுத்து தீவு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுனாமி காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாத நிலையில் சூரியனையே மறைக்கும் அளவுக்கு கரும்புகை எழுந்ததும் மீண்டும் தீவில் எரிமலை வெடிப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், உலகின் மூலை முடுக்கில் உள்ள பல நாடுகளிலும் இந்த எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் அதிர்வு
குறிப்பாக தூங்கு தீவில் இருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னையிலும் தொங்கு எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து எட்டரை மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அமைக்கப்பட்டுள்ள வளிமண்டல அழுத்தமானியில் டோங்கா எரிமலை வெடிப்பின் அதிர்வுகள் உணரப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

வானிலை பாதிப்பு
கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக கடலில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்புகள் வரும் காலங்களில் ஏராளமான வானிலை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ஆனால் தற்போதைக்கு உடனடியான பாதிப்புகள் ஏதும் இருக்காது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications