முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் போறதே.. பாஜக மாநில தலைவர் அண்ணாமாலை கடும் விமர்சனம்
விழுப்புரம்: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு செய்த சாதனைகளில் முதலமைச்சர் இரண்டு லட்ச ரூபாய் சைக்கிளில் 2 கிலோ மீட்டர் செல்வதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது என தேர்தல் பரப்புரையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை பற்றி விமர்சனம் செய்தார்.
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள சிறுவாடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, " திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு செய்த சாதனைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு லட்ச ரூபாய் சைக்கிளில் 2 கிலோமீட்டர் செல்வதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

திமுக வாக்குறுதி
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏராளமான மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர், தற்போது அதனை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். நான்கு மாத காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று அவர்கள் எந்த ஒரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வில்லை.

தாமரைக்கு வாக்கு
திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றாமல் மக்களிடையே பொய்களைச் சொல்லி வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி உள்ளனர். எனவே மக்கள் இதை உணர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை கேடிசி நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பள்ளிகள்திறப்பு என்பது காலத்தின் கட்டாயம் . பள்ளி திறப்பை பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் .

அரசு பரிசீலிக்க வேண்டும்
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் திறக்கும் போது, கோயிலுக்கு வரும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கும் நிலையில் வெள்ளி சனி ஞாயிறு மூடியிருக்கும் கோயிலை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் ஒரு சாராருக்கு மட்டும் அரசு ஆதரவாக செயல்பட கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications