Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன தவம் செய்தேனோ! பிறந்தநாளில் சொந்த ஊரில் தொண்டர்களுடன்.. கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்! காரணம்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : தனது 84 ஆவது பிறந்த நாளை சொந்த ஊரில் தொண்டர்கள் மற்றும் கிராம மக்களுடன் கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ் ர் தனது பெற்றோரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் விட்ட அழுத காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    பிறந்தநாளில் சொந்த ஊரில் தொண்டர்களுடன்.. கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ் - வீடியோ

    தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பாமக தலைவர் அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் இன்று (ஜுலை 25) தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    இதனையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

     பிறந்தவர் ராமதாஸ்

    பிறந்தவர் ராமதாஸ்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் ஜூலை 25 1939ஆம் ஆண்டில் சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். பள்ளிப்படிப்பைச் கீழ்விசிறி ஊரிலுள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியில் பயின்ற இவர், தனது மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தார். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.

    பாமக

    பாமக

    பின்னர், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும்விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார். பின்னர் தான் வன்னியர் சமூகம் பின் தங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து பேராசிரியர் தீரன், ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து `வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980ஆம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார்.

    84வது பிறந்தநாள்

    84வது பிறந்தநாள்

    இந்த அமைப்பு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாகியது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய சக்தியாக பாமக தற்போது வரை திகழ்கிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மருத்துவர் ராமதாஸ் நீண்ட தனது பிறந்தநாளை சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு தனது பிறந்த கிராமத்தில் 84 அடி உயர பாமக கொடியை ஏற்றினார்.

    கண்ணீர் விட்டு அழுதார்

    கண்ணீர் விட்டு அழுதார்

    அவருக்கு கிராம மக்கள் மேளதாளத்துடன் ராட்சத மாலை போட்டு வரவேற்றனர். என்ன தவம் செய்தேன் இம்மண்ணில் பிறக்க என கீழ்விசிறி கிராம மக்களிடம் கண்ணீர் மல்க கவிதை கூறினார். முன்னதாக தனது வீட்டிற்கு சென்று டாக்டர் ராமதாஸின் பெற்றோரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+