நிலத்தை அபகரித்ததாக திமுக எம்.பி மீது புகார்.. கலெக்டர் முன்பு காவலாளி தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியது. இந்த அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இராஜபாளையம் தி.மு.க எம்.பி தங்கபாண்டியன், மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர். பின்னர் அனைவரும் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை காவலாளியாக பணிபுரிந்த ஊழியர் தேவதானம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வாகனம் முன்பு தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கணேஷ் குமாரை தடுத்து நிறுத்தினார்கள்.
இது தொடர்பாக கணேஷ் குமாரிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் வெளியானது.
கணேஷ்குமார் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் ஒட்டிய பகுதியாக தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது.
திமுக எம்.பி தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் விவசாய நிலத்திற்க்கு செல்லும் பாதையில்லை எனவும், ஒரு கட்டத்தில் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நில சொத்தினை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கணேஷ் குமார் கூறினார்.
மேலும் தான் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியை திமுக எம்.பி தனது அதிகாரத்திணை பயனப்டுத்தி சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார் என்றும் கணேஷ் குமார் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.
அப்போது விவசாய நிலத்திற்க்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாகவும் நிலத்தினை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என்றும் கணேஷ் குமார் அவரிடம் தெரிவித்தார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறி சென்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications