அடுத்த 6 மாதங்களில்... கொரோனா அதிகமாக இருக்கும்... எச்சரிக்கும் பில்கேட்ஸ்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

உலகம் முழுவதும் தான் எதிர்பார்த்ததை விட பொருளாதார தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை காரணமாக கொரோனா தொற்றுக்களை குறைக்க முடியும் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2015-ம் ஆண்டே கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரஸ் ஆட்டிப்படைக்கும் என கூறியிருந்தார். அவரின் மைக்ரோசாப் நிறுவனம் கொரோனா மருந்து விநியோக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் அடுத்த நான்கு அல்லது ஆறு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இறப்புகள் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா நிலைமை மிக மோசமாக இருக்கும். கொரோனாவை விரட்டியடிக்க வேண்டுமானால் மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பாதிப்புகள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக கூறியுள்ளதால் நானும் கொரோனா தடுப்பூசியை பொது வெளியில் எடுத்து கொள்வேன். அமெரிக்காவிலும், உலகெங்கிலும் பொருளாதார தாக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த கணிப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. எங்களது அறக்கட்டளை கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கி வருகிறது.
உலகப் பொருளாதாரம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளை குறைக்க விரும்புகிறோம் என்று பில்கேட்ஸ் கூறினார்.உலக நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. அங்கு தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக பாதிப்பு இருப்பதும், உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications