Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாடு போய்ட்டு வந்து பையை திறந்து பார்த்தா? அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரிய பெண்.. பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: குரோஷியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீட்டில் வந்து ஆசையோடு சூட்கேசை திறந்த நிலையில், அதில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 18 தேள்கள் படையெடுத்து வந்த ஆஸ்திரிய பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வெளிநாடு பயணம் போகும் எல்லாரும், சுற்றுலா சென்ற நாட்டில் கிடைக்கும் வித்தியாசமான பல பொருட்களை வீட்டுக்கு வாங்கி வருவது வழக்கம்.

அதுவும் நம் நாட்டில் கிடைக்காத பொருட்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவர். இதேபோல் வெளிநாட்டில் இருந்து வாங்கி விட்டு, சொந்த ஊர் திரும்பியதும் அதனை வீட்டில் வந்து அதை ஆசை ஆசையாய் திறந்து பார்ப்பதும் வழக்கம்.

 அழையாய் விருந்தாளியாய். .

அழையாய் விருந்தாளியாய். .

அதுவும் தனது சொந்தக்காரர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் தான் அதனை திறந்து பார்ப்பார்கள். இப்படி ஆசையோடு திறந்து பார்க்கும் போது, தாங்கள் ஆசையாய் வாங்கிய பொருட்களுக்கு முன்பாக அழையாய் விருந்தாளியாய் விஷ ஜந்துக்கள் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதிர்ச்சியில் உறைந்து விட மாட்டோமா... அப்படிதான் ஆஸ்திரியாவின் நட்டர்ன்பட்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. அந்த பெண் குரோஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 18 தேள்கள்

18 தேள்கள்

தனது பயணம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்ததும், சற்று இளைப்பாறிவிட்டு தனது லக்கேஜ் பையை திறந்துள்ளார். திறந்ததும் அந்த சூட்கேசில் இருந்து அணி அணியாக தேள் தனது குடும்பம் குட்டியுமாக படையெடுத்துள்ளன. இதைப்பார்த்து திடுக்கிட்ட அந்த பெண் அலறியடித்துள்ளார். பின்னர் வீட்டில் கிடந்த குச்சியை எடுத்து ஒவ்வொரு தேள்களையும் வெளியே தட்டி விட்டு கொண்டு இருந்தார். எனினும் இதற்கெல்லாம் சளைக்காத தேள்கள் ஒவ்வொன்றாக அணி வகுத்து சூட்கேசில் இருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. மொத்தம் 18 தேள்கள் வெளியில் வந்தன.

 வனத்துறையினர் பிடித்து சென்றனர்

வனத்துறையினர் பிடித்து சென்றனர்

இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள விலங்குகள் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த விலங்குகள் மீட்பு குழுவினர், தேள்கள் அனைத்தையும் பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்துச்சென்றனர். அதன்பிறகே அந்தப் பெண் நிம்மதி அடைந்துள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று விட்டு வந்ததும் வீட்டில் ஆசை ஆசையாய் லக்கேஜ் பையை திறந்தால் இப்படியா நடக்கும் என நெட்டிசன்களும் இந்த செய்தி குறித்து நன்றாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

 3-வது சம்பவம்

3-வது சம்பவம்

தற்போது பிடிக்கப்பட்டுள்ள தேள்கள் அனைத்தையும், அதன் தாய்வீடான குரோஷியாவிற்கே திருப்பி அனுப்பும் பணி நடப்பதாக விலங்குகள் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இங்கேயே அவை பல்கி பெருகிவிடும் என்றாலும், அவை அந்நாட்டில் இர்ந்து வந்துள்ளவை என்பதால் திருப்பி அனுப்பபோவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரியாவில் இதுபோன்று நடக்கும் மூன்றாவது நிகழ்வு இது எனக்கூறப்படுகிறது. அராக்னிடா குடும்ப வகையை சேர்ந்த தேள்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதங்கள் உள்ளன. எனினும், இவற்றில் 30 முதல் 40 வகை தேள்கள் மட்டுமே மனிதனை கொல்லும் அபாயம் கொண்டதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+