வெளிநாடு போய்ட்டு வந்து பையை திறந்து பார்த்தா? அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரிய பெண்.. பரபர சம்பவம்
வாஷிங்டன்: குரோஷியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீட்டில் வந்து ஆசையோடு சூட்கேசை திறந்த நிலையில், அதில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 18 தேள்கள் படையெடுத்து வந்த ஆஸ்திரிய பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெளிநாடு பயணம் போகும் எல்லாரும், சுற்றுலா சென்ற நாட்டில் கிடைக்கும் வித்தியாசமான பல பொருட்களை வீட்டுக்கு வாங்கி வருவது வழக்கம்.
அதுவும் நம் நாட்டில் கிடைக்காத பொருட்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவர். இதேபோல் வெளிநாட்டில் இருந்து வாங்கி விட்டு, சொந்த ஊர் திரும்பியதும் அதனை வீட்டில் வந்து அதை ஆசை ஆசையாய் திறந்து பார்ப்பதும் வழக்கம்.

அழையாய் விருந்தாளியாய். .
அதுவும் தனது சொந்தக்காரர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் தான் அதனை திறந்து பார்ப்பார்கள். இப்படி ஆசையோடு திறந்து பார்க்கும் போது, தாங்கள் ஆசையாய் வாங்கிய பொருட்களுக்கு முன்பாக அழையாய் விருந்தாளியாய் விஷ ஜந்துக்கள் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதிர்ச்சியில் உறைந்து விட மாட்டோமா... அப்படிதான் ஆஸ்திரியாவின் நட்டர்ன்பட்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. அந்த பெண் குரோஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

18 தேள்கள்
தனது பயணம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்ததும், சற்று இளைப்பாறிவிட்டு தனது லக்கேஜ் பையை திறந்துள்ளார். திறந்ததும் அந்த சூட்கேசில் இருந்து அணி அணியாக தேள் தனது குடும்பம் குட்டியுமாக படையெடுத்துள்ளன. இதைப்பார்த்து திடுக்கிட்ட அந்த பெண் அலறியடித்துள்ளார். பின்னர் வீட்டில் கிடந்த குச்சியை எடுத்து ஒவ்வொரு தேள்களையும் வெளியே தட்டி விட்டு கொண்டு இருந்தார். எனினும் இதற்கெல்லாம் சளைக்காத தேள்கள் ஒவ்வொன்றாக அணி வகுத்து சூட்கேசில் இருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. மொத்தம் 18 தேள்கள் வெளியில் வந்தன.

வனத்துறையினர் பிடித்து சென்றனர்
இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள விலங்குகள் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த விலங்குகள் மீட்பு குழுவினர், தேள்கள் அனைத்தையும் பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்துச்சென்றனர். அதன்பிறகே அந்தப் பெண் நிம்மதி அடைந்துள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று விட்டு வந்ததும் வீட்டில் ஆசை ஆசையாய் லக்கேஜ் பையை திறந்தால் இப்படியா நடக்கும் என நெட்டிசன்களும் இந்த செய்தி குறித்து நன்றாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

3-வது சம்பவம்
தற்போது பிடிக்கப்பட்டுள்ள தேள்கள் அனைத்தையும், அதன் தாய்வீடான குரோஷியாவிற்கே திருப்பி அனுப்பும் பணி நடப்பதாக விலங்குகள் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இங்கேயே அவை பல்கி பெருகிவிடும் என்றாலும், அவை அந்நாட்டில் இர்ந்து வந்துள்ளவை என்பதால் திருப்பி அனுப்பபோவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரியாவில் இதுபோன்று நடக்கும் மூன்றாவது நிகழ்வு இது எனக்கூறப்படுகிறது. அராக்னிடா குடும்ப வகையை சேர்ந்த தேள்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதங்கள் உள்ளன. எனினும், இவற்றில் 30 முதல் 40 வகை தேள்கள் மட்டுமே மனிதனை கொல்லும் அபாயம் கொண்டதாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications