Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'2014-ம் ஆண்டில் பூமியில் விழுந்த விண்கல்'. . இப்போது கடலில் தேடும் விஞ்ஞானிகள் .. எதற்காக தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 2014-ம் ஆண்டு பூமியில் விழுந்ததாக கூறப்படும் விண்கல்லை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பபுவா நியூ கினியா கடல்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது.

சூரியக்குடுமபத்தில் உள்ள 8 கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இது ஒரு அதிசயம் என்று கூட சொல்லலாம்.

இதேபோல் நமது கற்பனைக்கு எட்டாத, விண்மீன் கூட்டம், பால்வெளி அண்டம் என ஏராளமான அதிசயங்கள் விண்ணில் நிறைந்திருக்கின்றன. அது தொடர்பான ஆய்வுகளிலும் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் மோதியதா? என்ன நடந்தது? நாசா என்ன சொல்கிறது?'

 தற்போது தேடும் பணி

தற்போது தேடும் பணி

அது போல தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூமியின் கடல் பகுதியில் விண்ணில் இருந்து விண்கல் ஒன்று விழுந்ததாக பலராலும் நம்பப்படுகிறது. எனவே இது எதனால் நிகழ்ந்தது, உண்மையில் கடலில் இந்த விண்கல் கிடக்கிறதா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இது குறித்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். கடந்த2014-ம் ஆண்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக நம்பப்படும் விண்கல் ஒன்று பபுவா நியூ கினியா கடல்பகுதியில் விழுந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விண்கல் விழுந்த நிலையில், இது தொடர்பான ஆராய்ச்சியை தற்போது விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர். ஆம் இந்த விண்கல் எப்படி பூமியில் விழுந்தது? எங்கு விழுந்துள்ளது? என்பது குறித்து முழு ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முதல் கட்டமாக விண்கல் விழுந்ததாக கருதப்படும் கடலின் ஆழத்தில் இந்த பெரிய விண்கல்லை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 பபுவா நியூகினியா கடல் பகுதியில்

பபுவா நியூகினியா கடல் பகுதியில்

இதற்கு முன்பாக ஓமுவாமுவா மற்றும் போரிசவ் ஆகிய விண்கற்கள் மட்டுமே நட்சத்திரங்களுக்கு இடையேயான விண்கல்லாக அறியப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டில் பபுவா நியூகினியா கடல் பகுதியில் விழுந்த விண்கல், இந்த இரண்டு விண்கற்களுக்கும் அப்பால் உள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விண்கல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர் அவி லியோப் மற்றும் மாணவர் அமிர் சிராஜ் ஆகிய இருவரும் இந்த விண்கல், நட்சத்திரங்களுக்கு இடையேயான தோற்றங்களை கொண்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

 கண்டுபிடிப்பது கடினம்

கண்டுபிடிப்பது கடினம்

எனினும் உரிய தரவுகள் இல்லாததால் இந்த விண்கல் நட்சத்திரங்களுக்கு இடையேயான தோற்றங்களை கொண்டது என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்க விஞ்ஞானிகள் சமூகம் ஏற்க மறுத்து விட்டது. பூமி வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரிந்து சாம்பல் ஆனதால் கடல் பரப்பில் சிறு சிறு துகள்களாக சிதைந்து இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், விண்கல்லின் எச்சங்களை கடலில் கண்டுபிடிப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

 உண்மையில் இது இயற்கையானதா?

உண்மையில் இது இயற்கையானதா?

இதனால், மிகப்பெரிய இழுவைக்கப்பலில் காந்தத்தன்மை கொண்ட பொருளை பயன்படுத்தி விண்கள் சிதறல்களை எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது. முன்னதாக லியோப் கடந்த ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ''விண்கல்லை தேடி ஆய்வு செய்வதன் மூலம் உண்மையில் இது இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? அல்லது வெறும் பாறையா? என்பதை உறுதி செய்ய முடியும்" என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+