கொரோனாவை போலவே மங்கி பாக்ஸ்? அப்போ இது தான் அடுத்த பெருந்தொற்றா! சில நாட்களில் WHO முக்கிய ஆலோசனை
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனாவை பெந்தொற்றாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.
வேக்சின் பணிகள், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் எனப் பல கட்ட நடவடிக்கைக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது.

மங்கி பாக்ஸ்
இதனிடையே அடுத்த தலைவலியாக உலகின் பல பகுதிகளில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ளது. பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே மங்கி பாக்ஸ் பாதிப்பு இருக்கும். அங்கு அது எண்டமிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.

ஐரோப்பா
இப்போது வரை உலகெங்கும் 3,300க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 42 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள பாதிப்புகளில் 80% ஐரோப்பாவில் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1400 பேருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவைத் தாண்டி
பொதுவாக இந்த வைரஸ் ஆப்பிரிக்காவைத் தாண்டாது. ஆனால், இந்த முறை அது ஆப்பிரிக்காவைத் தாண்டி பல இடங்களுக்கும் பரவி உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்தே உலகம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், எங்கு இந்த மங்கி பாக்ஸ் அடுத்த பெந்தொற்றை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அவசர நிலை
இந்தச் சூழலில் வரும் வியாழக்கிழமை உலக சுகாதார அமைப்பு அதன் அவசரக் குழுவைக் கூட்ட உள்ளது. மேற்குலகில் பல நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இதைச் சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து வல்லுநர்கள் பரிசிலினை செய்ய உள்ளனர். இதை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தால், இது அசாதாரண நிகழ்வாகக் கருதப்படும்.
Recommended Video

கொரோனா போல
முன்னதாக கொரோனா பரவ தொடங்கிய போதும், அதை பெருந்தொற்றாக அறிவிப்பதற்கு முன்னர் சர்வதேச அவசர நிலையாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் எடுக்கப்பட்டதை போல சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். முன்னதாக கொரோனா வைரஸ், போலியோ ஆகியவற்றை ஒழிக்க இந்த நடைமுறையையே பின்பற்றியது.

மங்கி பாக்ஸ்
குரங்கு அம்மை பல நாடுகளுக்குப் பரவ தொடங்கி உள்ள நிலையில், அதை அவசர நிலையாக அறிவிப்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவசர நிலையாக அறிவித்தால், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications