பெண்களே.. வீட்டு சமையலில் இந்த பொருளை மறக்காமல் உபயோகியுங்கள்..பணம் உங்களைத் தேடி வரும்!
சென்னை: வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. பணம் அதிகம் சேர நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தைப் பார்க்கலாம்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். நமது வீட்டிற்குள் நறுமணம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அருளையும் செல்வத்தையும் வழங்க சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பணத்தை ஈர்த்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

கிராம்பு
திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்படும் நைவேத்தியத்தில் பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் பணத்தை அதிகம் ஈர்க்கும் சக்தி கொண்டவை. ஏழுமலையானுக்கு மலை மலையாக காணிக்கை வருமானமாக கொட்டுவது இதனால்தான் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனவே நம்முடைய வீட்டு சமையலில் கிராம்பு, ஏலக்காயை மறக்காமல் உபயோகிக்க வேண்டும். சமையலில் மற்ற மசாலா பொருட்களை விட கிராம்பை ஒன்றிரண்டு கூடுதலாக சேர்ப்பதால் பிரச்சனை ஒன்றும் இல்லை.

மகாலட்சுமிக்கு மாலை
கிராம்பை எப்பொழுதும் பணம் இருக்கும் இடங்களில் எல்லாம் போட்டு வையுங்கள். இதன் வாசம் வீச வீச உங்களுடைய எண்ண அதிர்வலைகளுக்குள் மாற்றங்கள் நிகழும். மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை விளக்கேற்றி பூஜை செய்யும் போது கிராம்பு மாலை சாற்றி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். வெள்ளிக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமிக்கு போட்டு தூபம் காண்பிக்க பல வழிகளில் இருந்தும் வருமானம் பெருகும். குடும்பத்தில் இருக்கும் வறுமையெல்லாம் நீங்கும்.

பச்சைக்கற்பூரம்
பச்சை கற்பூரத்தை பணம் இருக்கும் இடங்களில் நொறுக்கி வைத்தால் அதன் வாசம் பணத்தை தக்க வைத்து, மேலும் மேலும் பெருக செய்யும் என்கிற ஐதீகம் உண்டு. பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இதனால் பணம் பெருகும்.

லவங்கப்பட்டை
பணத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து வைக்கும் பொழுது பணம் ஆனது அந்த இடத்தில் பெருக துவங்கும். லவங்க பட்டையில் இருக்கும் வாசம் மகாலட்சுமிக்கு இஷ்டமான வாசம் ஆகும். இந்த புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை ஆகும். எனவே பச்சை நிற பட்டு துணி ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டையை பொடித்து பவுடராக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை கற்பூரத்திற்கு இணையாக இருக்கும் இந்த இலவங்க பட்டை இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

வெந்தயம்
வெந்தயம் சிறிதளவு கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீட்டு அடுப்பங்கரையில் ஈசான்ய மூலையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. பண வரவும் அதிகரிக்கும். வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

சந்தோஷமாக செலவு செய்யுங்கள்
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும். ஈயா பண்டம் தீயாய்க் கெடும் என்பார்கள். சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள்.

வீடு சுபிட்சம் அடைய
ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு.

அதிர்ஷ்டமான நேரம்
குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். பணத்தை சேமிக்கும் போதும் குளிகை நேரத்தில் போய் வங்கியில் செலுத்துங்கள் பணம் அதிகம் சேரும்.
நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து தான் பாருங்களேன். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications