கேப்ரில்லா வெளியிட்ட ஒற்றைப்பதிவு.. என்ன இப்படி சொல்லிவிட்டார்...!! குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா போட்டோக்களை வெளியிட்டு குதர்க்கமாக கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.
ஒரு பக்கமாக காற்று வாங்க...தலையை சாய்த்து ரசிக்கும் கேப்ரில்லா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாக்களில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், தற்போது மீண்டும் சீரியல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கேபிரில்லாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். என்ன தான் இவர் சின்னத்திரையில் வலம் வநது கொண்டிருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளைப் போன்று தான் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த கேப்ரில்லா இளைஞர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்தான். டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தன்னுடைய நடன திறமையை பலருக்கும் அறிமுகப்படுத்திய அதே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். கேப்ரில்லா என்னும் பெயரை சொல்லும் போதே இளைஞர்களின் மனதில் புன்னகை பூத்து குலுங்கி வருகிறதாம். அவர் சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஈரமான ரோஜா காவியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா கேரக்டரில் தற்போது கேப்ரில்லா நடித்து வருகிறார். இவரை கதாநாயகியாக திரைப்படங்களில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை தான் கொடுத்திருந்ததாம். ஆனாலும் இவருக்காக இவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் கேப்ரில்லா தற்போது இன்ஸ்டாகிராமில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
என்னவாக இருக்கும்
மார்டன் உடை புடவை என விதவிதமாக வலம் வரும் கேப்ரில்லா தற்போது புடவையில் பவ்யமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு கொடுத்த கேப்ஷன் தான் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறதாம். அதில் இறுதியாக காவியா அல்லாத கேப்ரில்லாவாக நான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகப் போகிறாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வழக்கம்போல ரசிகரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கேப்ரில்லா மௌனமாக இருந்து வருகிறார். இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ வெள்ளித்திரைக்கு ரெடி ஆகியாச்சா??என்று இடைவிடாமல் கேள்விகளை மலமலவென அனுப்பி வருகிறார்கள்.