பாக்யாவுக்காக ராதிகாவை பலிஆடாக்கிய கோபி.. எதிர்பாராத செயலால் அதிர்ச்சியில் இனியா.. திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நக்கலான பேச்சை பார்த்து பாக்கியா இனி தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்திருக்கிறார். அவரை எதிர்த்து கோபி புதிய சூழ்ச்சியை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
கோபி தன்னை வைத்து புதிய திட்டம் போடுவதை அறிந்து கொண்ட ராதிகா முகத்துக்கு நேராகவே கோபியை திட்டி இருக்கிறார்.
அடுத்த கண்ணம்மாவாக பிக்பாஸ் நடிகை தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.. குவியும் கருத்துக்கள்
பாக்யாவின் திடீர் முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் தேர்தலில் யாரும் நிற்காத காரணத்தால் அந்த ஏரியா செக்ரட்டரி தன்னுடைய மனைவியை அன்னப்போஸ்ட் ஆக செகரட்டியாக தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்பட போகிறார். அப்போது பாக்கியா, கோபி தன்னை பார்த்து நக்கலாக பேசியதையும், அதுபோல அக்கம் பக்கத்தினர் தன்னை பற்றி பேசியதையும் நினைத்தும் பார்க்கிறார். திடீரென தான் தேர்தலில் நிற்கப் போவதாக செல்வியிடம் கூற கடைசி நேரத்தில் பாக்யா நிற்க போவதாக அறிவிக்கிறார்கள்.
தேர்தல் தேதி
பாக்கியாவின் திடீர் முடிவை கேட்ட கோபி அதிர்ச்சி அடைந்தாலும் நக்கலாக சிரிக்கிறார். பழைய செகரட்டரி, இன்று இப்படி சொல்லிவிட்டு நாளை நான் வரவில்லை என்று சொல்லக்கூடாது என்று சொல்ல, தேர்தல் எப்போது என்று தேதி மட்டும் சொல்லுங்கள் என பாக்கியா வைராக்கியமாகக் கேட்கிறார். அனைவரும் கைத்தட்டி பாக்யாவுக்கு வாழ்த்து கூறுகின்றனர். தேர்தல் இந்த மாதம் 18ஆம் தேதி என அறிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பாக்யாவிற்கு ஓட்டு அளிக்க வேண்டி அவருடைய மாமனாரான ராமமூர்த்தி அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறார்.
எழில் கேட்ட கேள்வி
அடுத்ததாக பாக்கியா வீட்டிற்கு வந்ததும் தேர்தலில் நிற்கப் போகும் விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ஈஸ்வரி மட்டும் எனக்கு இது பிடிக்கவில்லை. வேண்டாத வேலை என கோபப்படுகிறார், எழில் இதற்கு முன்பு அப்பா வீட்டில் இருக்கும்போதுதான் அவர் எதற்கும் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். இப்போதும் அம்மா எது பண்ணினாலும் போராடி தான் அனுமதி வாங்கணுமா? ஏன் அவர்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டீங்களா? என கேட்கிறார். என்னை எல்லோரும் கேவலமாக பேசுகிறார்கள். அந்த செக்ரட்டரி கூட கோபி உங்களை விட்டு போன பிறகு உங்களுக்குன்னு அடையாளமே இல்லை என்று சொன்னாங்க, அதனால் தான் நான் இந்த எலக்சன் நிற்க முடிவெடுத்தேன் என்று சொல்ல கடைசியில் ஈஸ்வரி என்னமோ பண்ணுங்க என கோபத்தோடு உள்ளே செல்கிறார்.
கோபிக்கும் அப்பாவுக்கும் சண்டை
அடுத்ததாக வீட்டுக்கு வரும் கோபி ராதிகா மற்றும் இனியாவிடம் இந்த ஏரியா செக்ரட்டரி போஸ்ட்க்கு யார் நிற்கிறார்கள் தெரியுமா? என கேட்க, இனியா யாரென்று கேட்டதும் உங்க அம்மா தான் நிற்கிறார் என சொல்ல, பாக்கியாவை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். இனியாவும் அம்மா எப்படி அதை மேனேஜ் பண்ணுவாங்க என கேட்க? கோபிக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கோபி இது என்ன மாவாட்டுற வேலையா? உங்க மருமகளுக்கு என ஏளனமாக பேசுகிறார். அதை கேட்டு கோபப்பட்டு ராமமூர்த்தியும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் கண்டிப்பாக பாக்கியா ஜெயிப்பாள், அவள் ஜெயிச்சு விடுவாள் நீ எதற்கு இப்படி பேசிகிட்டு இருக்க என சொல்ல, ராதிகா எதற்கு உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் நீங்க தலையிடுறீங்க என்று வார்னிங் கொடுக்கிறார்.
கோபியின் சவால்
அப்போது கோபியின் அப்பா உன்னை விட அவளுக்கு இந்த ஏரியாவில் இருக்கிற எல்லாத்துக்கும் நல்லா தெரியும். நீ நடந்து போனா ஒருத்தருக்கும் உன்னை மதிக்க மாட்டாங்க..ஆனா பாக்கியா, எல்லாருடைய சந்தோசம், துக்கம் என எல்லாத்துலயும் பங்கு எடுத்து இருக்கா என கூற, அதற்கு கோபி அவ சாம்பார் ரசம் கொடுத்து எல்லார்கிட்டயும் அறிமுகம் ஆகி இருக்கா, என நக்கல் செய்கிறார். முடிஞ்சா நீ ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சு காட்டு? என சொல்ல கோபி நான் முடியாது. இங்கே பெண்கள் தான் நிற்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்களா? அதனால என் வைஃப் ராதிகா நிற்பாள். அவ இந்த தேர்தலில் நிற்பா அவளை நிற்க வைத்து நான் ஜெயித்து காட்டுவேன் என சவால் விடுகிறார்.
ராதிகா கொடுத்த அதிர்ச்சி பதில்
ராதிகா அதெல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்ல, இல்லை நீ நின்று தான் ஆக வேண்டும். எது வந்தாலும் பார்த்துக்கலாம் என கோபி சொல்கிறார். பிறகு கோபி ராதிகாவிடம் பேச ரூமுக்கு போகும்போது அங்கே ராதிகா நீங்க என்ன லூசா? என திட்டுகிறார். நான் எதுக்கு தேர்தலில் நிற்க வேண்டும். என்று கேட்கும் போது நீ ஏன் நிற்கக்கூடாது என கோபி பதிலுக்கு கேள்வி கேட்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா நீங்க நினைக்கிறதுகெல்லாம் நான் ஆள் கிடையாது என சொல்லி கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.