Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 6: “ நான் பேசும் ஸ்டைல் தப்பா” கதறும் ஆயிஷா... இப்படியா எல்லோரும் டார்கெட் பண்ணுவாங்க!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஜனனியின் பேச்சைக் கேட்டு ஆயிஷா கதறிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே நேற்று அசல் கோளாருடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இன்று ஜனனி பேசி இருப்பது ஆயிஷாவை அதிகமாக பாதித்திருக்கிறது

போட்டியாளர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே பிக் பாஸ் தற்போது பக்காவாக பிளான் போட்டு புது டாஸ்க் வைத்துள்ளது.

பிக் பாஸ் கொடுத்த புது டாஸ்க்

பிக் பாஸ் கொடுத்த புது டாஸ்க்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் மூன்றாவது நாள் தொடங்கி இருக்கின்றது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஆயிஷா கதறிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது நீங்கள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறீர்கள் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஜனனியின் கருத்து

ஜனனியின் கருத்து

அதில் இன்று ஜனனி நான் ஆயிஷாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் பிறகு அவருக்கும் எனக்கும் சண்டை வரலாம் என்று கூறுகிறார். ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆயிஷா நான் அப்படி உன்னை நினைக்கலை என்று கூறுகிறார். அதற்கு ஜனனி நான் பேசுவது உனக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார். அப்போது ஆயிஷா நான் தயவு செய்து எல்லோர்கிட்டயும் ஒன்று தெளிவுபடுத்துகிறேன். நான் பேசும் டப்பிங் ஸ்டைல் வந்து தப்பா இருக்கும் என்று நான் ஃபீல் பண்றேன். எல்லார்கிட்டயும் விளக்கமும் கொடுக்கிறேன் என்று கூறுகிறார். அப்போது அங்கே இருந்த விஜே மகேஸ்வரி உன் ஸ்டைல் எங்களுக்கு தப்பா தெரியல என்று கூறுகிறார்.

கதறும் ஆயிஷா

கதறும் ஆயிஷா

இல்லை நான் என்னோட கடமைக்கு எல்லோர் கிட்டயும் சொல்லுகிறேன் என்று குழப்பத்திலும் வெறுப்பிலும் ஆயிஷா பேசுகிறார். ஆயிஷா பீல் பண்ணுவதை பார்த்து சக போட்டியாளர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். சரி ஓகே இதை விடு என்று விஜே மகேஸ்வரி கூறுகிறார். அப்போது ஓகே நான் எதுவும் பேசல என்னை விட்ருங்க என்று ஆயிஷா கத்துகிறார். ஜனனி என்ன பேசுவது என்று தெரியாமல் தலையை குனிந்த படி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

தொடரும் கருத்து வேறுபாடு

தொடரும் கருத்து வேறுபாடு

ஏற்கனவே நேற்று ஆயிஷாவிடம் அசல் கோளார், நீங்க என்னிடம் வாடா போடா என்று பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராக பேசியிருந்தார். அதற்கு ஆயிஷாவும் நான் உங்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தானே அப்படி பேசினேன் என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அசல் கோளார் பலர் முன்னிலையில் நீங்கள் என்னை இப்படி அழைப்பது எனக்கு வருத்தமாகவும் ஒரு மாதிரி இருக்கிறது என்று தெளிவு கொடுத்து இருந்தார். இனி நான் அப்படி கூற பேசமாட்டேன் என்று ஆயிஷா அப்போதே கூறிட்டார். இந்த நிலையில் நேற்று முழுக்க ஜனனி ஆயிஷா உடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு இன்று ஆயிஷா உடன் இருந்தால் தனக்கு சண்டை வரும் என்று பேசி இருப்பது ஆயிஷாவின் ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+