எதிர் நீச்சல்: மகன் வாழ்க்கைக்காக ஈஸ்வரியின் முடிவு.. கௌதம் பற்றி சக்தி கேள்வி! ஜனனி முடிவு இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் தன்னுடைய காலேஜில் ப்ரொபோசரை மரியாதை இல்லாமல் பேசுவதால் ஈஸ்வரி கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

ஈஸ்வரியில் எதிர்பாராத செயலால் குணசேகரன் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ந்து போயிருக்கிறது.

தன்னுடைய மகன் வாழ்க்கைக்காக ஈஸ்வரி புது முடிவை எடுத்து இருக்கிறார்.

ஜனனி கூறும் அறிவுரை

ஜனனி கூறும் அறிவுரை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் தன்னுடைய ப்ரொபோசர் பெண் என்றும் அவர் அறிவுரை சொல்வது தனக்கு கடுப்பாக இருக்கிறது. பெண்ணாக அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசியதற்கு ஈஸ்வரி பளார் என்று கன்னத்தில் அறைந்து இருந்தார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்க ஜனனி இடம் நான் இனி காலேஜ் க்கு போக மாட்டேன் என்று ஈஸ்வரி சொல்ல, ஜனனி இது தவறு நீங்கள் காலேஜுக்கு செல்ல வேண்டும். நீங்கள் தர்ஷனை அடித்தது தவறு கிடையாது அவன் தப்பு என்பது தெரியாமல் வளர்ந்து வருகிறான். அதனால் அவனுக்கு தப்பை புரிய வைக்க வேண்டும் என்றால் நீங்கள் காலேஜுக்கு போக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

அந்த வீட்டில் நடப்பது தானே

அந்த வீட்டில் நடப்பது தானே

பிரின்ஸ்பால் அறைக்கு சென்ற ஈஸ்வரியிடம் அங்கேயும் ஆசிரியர்கள் அனைவரும் இவன் செய்த தவறுகளை கூறுகின்றனர். இவன் எப்படி இந்த மாதிரி ஒரு ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். பெண் என்றால் அடிமையாக இருக்க வேண்டும். எவ்வளவுதான் படித்தாலும் வீட்டில் வேலை தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுகிறான். இவன் இது எங்க இருந்து கற்றுக் கொண்டான் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று சொல்ல, ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பை கேட்கிறார். இதற்கு காரணம் எங்கள் வீட்டில் உள்ள சூழ்நிலைதான் அதற்கு நானும் உடந்தையாக இருந்துவிட்டேன். படித்த பெண்ணாக இருந்தாலும் வீட்டில் சமையல் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றும் எவ்வளவு கேவலப்படுத்தி நாளும் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையை நான் இவனுக்கு கற்பித்து விட்டேன் அதனால் தான் இப்படி இருக்கிறார். அதனால் மன்னிப்பு கேட்டு இவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை தர்ஷனுக்கு டிசி கொடுத்து விடுங்கள் அவன் இதற்கு பிறகு படிக்க வேண்டாம் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

போட்டு கொடுத்த வகுப்பு ஆசிரியை

போட்டு கொடுத்த வகுப்பு ஆசிரியை

பின்பு தர்ஷன் காலேஜுக்கு சென்றதும் அவனுடைய வகுப்பு ஆசிரியை தர்ஷனை பற்றி பல குறைகளை ஈஸ்வரி இடம் சொல்ல, ஈஸ்வரி அமைதியாகவே கேட்டுக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியை பார்த்து அதிர்ச்சியான அவருடைய வகுப்பு ஆசிரியை, நீங்க எவ்வளவு சைலன்டா இருக்கீங்க ஆனா உங்க பையன் அப்படி இல்லை. பெண்களிடம் அடிமை என்பது போல பேசுகிறான். என்னையே ஒரு காலேஜ் புரபசர் என்பது மறந்து ஒரு பெண் என்கிற ஒரு கோணத்தில் தான் பார்க்கிறான் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கின்றார். பிறகு இதற்கு முன்பு பல தடவை நான் உங்களுக்கு மெயில் அனுப்பினேன் நீங்க பார்க்கவில்லையா? என்று கேட்க எனக்கு தெரியாது என்று ஈஸ்வரி சொல்கிறார். உங்களால் வர முடியாது. அம்மா நடக்க முடியாத நிலைமையில் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். அப்பா பிசினஸ் விஷயமாக வெளியே சென்று இருக்கிறார். என்றெல்லாம் இவன் என்னிடம் சொன்னான் என்று பல உண்மைகளை போட்டுக் கொடுக்கிறார். பிறகு பிரின்ஸ்பலை பார்க்க அனுப்பி வைக்கின்றனர்.

அந்த வீட்டில் நடப்பது தானே

அந்த வீட்டில் நடப்பது தானே

பிரின்ஸ்பால் அறைக்கு சென்ற ஈஸ்வரியிடம் அங்கேயும் ஆசிரியர்கள் அனைவரும் இவன் செய்த தவறுகளை கூறுகின்றனர். இவன் எப்படி இந்த மாதிரி ஒரு ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். பெண் என்றால் அடிமையாக இருக்க வேண்டும். எவ்வளவுதான் படித்தாலும் வீட்டில் வேலை தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுகிறான். இவன் இது எங்க இருந்து கற்றுக் கொண்டான் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று சொல்ல, ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பை கேட்கிறார். இதற்கு காரணம் எங்கள் வீட்டில் உள்ள சூழ்நிலைதான் அதற்கு நானும் உடந்தையாக இருந்துவிட்டேன். படித்த பெண்ணாக இருந்தாலும் வீட்டில் சமையல் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றும் எவ்வளவு கேவலப்படுத்தி நாளும் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையை நான் இவனுக்கு கற்பித்து விட்டேன் அதனால் தான் இப்படி இருக்கிறார். அதனால் மன்னிப்பு கேட்டு இவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை தர்ஷனுக்கு டிசி கொடுத்து விடுங்கள் அவன் இதற்கு பிறகு படிக்க வேண்டாம் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஜனனியின் பதில் என்ன

ஜனனியின் பதில் என்ன

தர்ஷன் அம்மா பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். நான் இனி இப்படி பேச மாட்டேன். என்னை மன்னிச்சு விடுங்க அம்மா ப்ளீஸ் தயவு செய்து டிசி வேண்டும் என்று கேட்காதீங்க என்று சொல்ல வகுப்பு ஆசிரியை உங்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு கேரக்டரை நான் பார்த்ததில்லை என்று கூறி செல்கிறார். அதே நேரத்தில் ஜனனி வீட்டை விட்டு வழக்கம் போல வெளியே செல்லும்போது சக்தி தன்னுடைய பைக்கை எடுத்து வெளியே செல்ல கிளம்புகிறார். அப்போது அருகில் வந்த ஜனனியை பார்த்து இப்போ என்ன அன்னைக்கி கௌதம் கூட சுத்துனதுக்கு விளக்கம் கொடுக்க போறியா? என்று கேள்வி கேட்க அதற்கு ஜனனி சிரித்தபடி இருக்கிறார். இனி நீ நான் எதற்கு உனக்கு விளக்கம் தர வேண்டும். நீ குந்தவை கூட ஒரே அறையில் தங்குனதற்கு எனக்கு விளக்கம் தந்தியா? என்று கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+