வடிவேலு பாலாஜியின் கெட்டப்பில் மாறி இருக்கும் அறந்தாங்கி நிஷா...உருகும் ரசிகர்கள்
சென்னை: வடிவேலு பாலாஜியின் மறைவுக்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் அவரை நினைத்து அதிகமாக பீல் பண்ணி வருகின்றனர்
பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் போலவே அவருடைய கெட்டப்பில் வளம்பெறும் அறந்தாங்கி நிஷாவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
பார்த்ததும் ஒரு நிமிடம் அனைவருக்கும் வடிவேலு பாலாஜியின் நினைவுகள்தான் எட்டிப்பார்க்கிறதாம்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய பாலாஜி.. ஒரு சிறந்த மிமிக்கிரி கலைஞர் ஆவார். அதோடு மட்டுமின்றி தன் உடல் மொழியிலும் நகைச்சுவை செய்யும் விதத்திலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போன்று அச்சு அசலாக செய்ததால் வடிவேல் பாலாஜி என்று மக்களிடம் மிகவும் பிரபலமானார். தனது காமெடி திறமையின் மூலம் ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் அனைத்து விதமான காமெடி ரியாலிட்டி ஷோக்களிலும் தவிர்க்க முடியாத நபராக பங்குபெற்று ஒரு கலக்கு கலக்கி வந்தார்.

மதுரைக்காரர்
மதுரையில் பிறந்த பாலாஜி மதுரை மண் வாசம் வீசும் தனது பேச்சாலும், சக கலைஞர்களுடன் நிகழ்ச்சிகளில் அவர் பெர்பாமன்ஸ் பண்ணும் வெகுளித்தனத்துக்காகவும் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு வந்தார்.பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த வடிவேல் பாலாஜி தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். யார் கண் பட்டதோ என்னவோ..? கொரோனா முதல் அலை இவரது வாழ்க்கையில் புயலைக் கிளப்பியது. சிறப்பாக இல்லாவிட்டாலும் சீராக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் கொரோனா ஊரடங்கு மற்றும் படப்பிடிப்பு தடை போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதாரத் தடையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

மரணம் வரை கொண்டு சென்ற மன அழுத்தம்
அதிக மன அழுத்தம் இவரை ஹார்ட் அட்டாக்கில் கொண்டு விட்டது முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி, போதிய பண வசதி இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்த பொழுது யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சக கலைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செலிபிரிட்டிகள் ,நடிகர்கள் என்றாலே வசதியாக தான் இருப்பார்கள் என்று போலி பிம்பத்தை இவரது மரணம் தோலுரித்தது. சினிமா கலைஞர்கள் அனைவரும் வசதியானவர்கள் அல்ல அவர்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் இவரது மரணம் உணர்த்தியது.

நிஷாவின் அசத்தல் கெட்டப்
இவர் இறந்த நேரத்தில் விஜய் டிவியில் இவருக்காக நடத்தப்பட்ட துக்க அனுசரிப்பு நிகழ்ச்சியில் சக கலைஞர்கள் வடித்த கண்ணீரை வைத்து வடிவேல் பாலாஜியின் நல்ல குணங்களை நாம் அறிந்து கொள்ளலாம். தற்பொழுது அறந்தாங்கி நிஷா அவர்கள் ஒரு காமெடி ஷோவில் பங்கேற்பதற்காக வடிவேலுவின் தலைநகரம் படத்தில் வரும் நாய் சேகர் கெட்டப் போட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி செட்டில் உள்ளவர்கள் கூட ஏற்கனவே இந்த கெட்டப்பில் கலக்கிய வடிவேல் பாலாஜி அப்படியே அச்சு. அசலாக.. உரித்து வைத்தார் போல் இருப்பதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளனர். இந்த போட்டோக்களை வடிவேலு பாலாஜின் சக கலைஞரும் நண்பருமான அறந்தாங்கி நிஷா இதனை நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளது.. அனைவருக்கும் வடிவேலு பாலாஜியை ஒரு நிமிடம் கண்முன்னே கொண்டு வந்தது போல் உள்ளது...












Click it and Unblock the Notifications