Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமரையை பற்றி இசைவாணியின் பகுதி மக்கள் இப்படி தான் பேசிக் கொள்கிறார்களாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் தாமரைக்கும் இசைவாணிக்கும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அனைவரும் அறிந்தது தான்.

இசைவாணிக்கு ஆதரவு கொடுத்து வந்த அவருடைய பகுதி மக்கள் தாமரையை பற்றி பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடைசியாக வெளியே வரும்போது தாமரைக்கு இசைவாணி அறிவுரை கூறியதை பார்த்து இசை வாணியின் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்களாம்.

எதிர்பார்க்காத கேரக்டராக இருக்கிறது

எதிர்பார்க்காத கேரக்டராக இருக்கிறது

ஐந்தாவது சீசனில் நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது போட்டியாளர்களை அனைவரையும் ஆட்டம் காண செய்து வருகிறார். இவர் ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி வருகிறார். இவருடைய கேரக்டரை பார்த்து இவரை திட்டி தீர்த்தாலும், பலருக்கும் இவருடைய எதார்த்தமான நடிப்பு இல்லாத குணம் பிடித்துவிட்டது என்றும் கூறிவருகின்றனர். என்னதான் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது தாமரையிடம் நல்ல விதமாகத்தான் இசைவாணி பேசிவிட்டு வந்தாராம்.

இசைவாணியே சொல்லிவிட்டாரே

இசைவாணியே சொல்லிவிட்டாரே

இசைவாணியிடம் அவருடைய பகுதி மக்கள் தாமரையைப் பற்றி நல்ல விதமாக தான் பேசி வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ரொம்பவே பாவம் வெகுளியாக இருக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். நானும் அதை தான் நினைக்கிறேன், சில நேரங்களில் முகத்துக்கு நேராக அவர் பேசி விடுவதால் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் எனக்கு கூட ஒரு சில நேரங்களில் அப்படித் தோன்றியது ஆனால் இவர் எந்த நடிப்பும் இல்லாமல் இருக்கிறார் என்றுதான் நான் வெளியில் வரும்போது பேசிக் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கொண்டு வருகிறது

தொடர்ந்து கொண்டு வருகிறது

இசைவாணி நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது தாமரையிடம் நல்லவிதமாகப் பேசி விட்டு வந்ததைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் நீ நல்ல காரியம் செய்தாய் என்று கூறியிருக்கிறார்கள். தாமரைச்செல்வி ஆரம்பம் முதலே ஒரு சிலருடன் கருத்து வேறுபாடு காரணமாக காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அது முதல் முதலில் நமிதா மாரிமுத்துவிடம் தொடங்கி தற்போது பிரியங்காவிடம் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ப்ரமோவிலும் தாமரைச் செல்வியின் அடாவடியான சண்டைகள் இடம்பெற்று வருகிறது.

இதை எதிர்பார்க்கலயே

இதை எதிர்பார்க்கலயே

கண்ணாடி டான்ஸ்கில் இசை வாணியை கடுப்பேற்றும் விதமாக தாமரைச்செல்வி நடந்துகொண்டது பலருக்கும் என்னதான் நடக்குது என்று சொல்லும் படியும் தான் இருந்துள்ளது. ஆனால் விளையாட்டை விளையாட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று இப்போது பல ரசிகர்கள் தாமரை செல்விக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்ன தான் இவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தாமரைச்செல்வி பற்றி நல்ல விதமாக இசைவாணி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+