இந்த மனதிற்காகத்தான் ராஜு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்... வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் ப்ரமோவில் ராஜூவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.
அந்த மனசு தான் சார் கடவுள் என்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கூறிவருகின்றனர்.
சொன்னதை செய்வதில் கில்லாடி என்பதை ராஜுவும் தவறாமல் நிரூபித்துவிட்டார்.

தனித்துவமான திறமை
வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடுகிறது அந்த வகையில் தற்போதைய ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கும் ராஜூவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட தன்னுடைய பெருந்தன்மையை வெளிக்காட்டுவதாக அமைந்து வருகிறது. என்னதான் ஒருசில நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு ராஜுவின் மீது நெகட்டிவ் கமெண்ட்டுகளை எறிந்து வந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அதிகரிக்கும் ஆதரவு
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளிலிருந்து கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் கொண்டு சென்று கொண்டிருப்பதில் ராஜுவும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டு வித்தியாசமாக இருந்து வருவதற்கு காரணம் இவர் கடந்த நான்கு சீசன்களையும் நன்றாக பார்த்து பழகி வந்துள்ளார் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய ரசிகர்கள் அவர் எல்லா சூழ்நிலையும் அவருடைய சுய கேரக்டரில் நடந்து கொண்டு வருகிறார். அதனால் தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். போட்டியாளர்களுக்கு உண்மையாகவும் விளையாட்டில் அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பல செயல்களை செய்து வருகிறார் .

அண்ணாச்சி யோடு ஏற்பட்ட நட்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து இமான் அண்ணாச்சியை தன்னோடு கடைசிவரைக்கும் கூட்டிக் கொண்டு செல்வேன் என்று நம்பிக்கையாக இருந்த ராஜு, கடந்த வாரம் இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தின் போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டார். அவர் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் இமான் அண்ணாச்சியை அவர் மிஸ் பண்ணிக் கொண்டிருந்தாலும் தற்போது அவருக்கு பதிலாக ராஜூக்கு துணையாக வந்திருப்பது சஞ்சீவ். சஞ்சீவ் பல நேரங்களில் யார் தவறு செய்தாலும் நேர்மையாக எடுத்துக் கூறுவது அனைவருக்கும் பிடித்துள்ளது.

பெருந்தன்மை பெருசுதான்
இந்த வார எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் பிக்பாஸ் கொடுத்துள்ளது. இரண்டு போட்டியாளர்கள் ஒரு அணியாக சேர்ந்து தாங்கள் யாரை காப்பாற்றப் போகிறார்கள் என்பதை கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்தபடியே போட்டோவை எடுத்து காட்ட வேண்டும். இரண்டு போட்டியாளர்களும் தனித்தனி கண்ணாடி அறைக்குள் இருந்தாலும் இருவரும் ஒரே போட்டோவை எடுத்து காட்ட வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று பிக் பாஸ் கூறியிருந்தது. அதில் ராஜு, சஞ்சீவ் போட்டோவை எடுத்துக் காட்டி அவர் அவருடைய மகள் இந்த வீட்டிற்குள் வந்து அனைத்தையும் சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதனால் அவரை நான் காப்பாற்றுகிறேன் என்று கூறியிருந்தார் இதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்த மனசு தான் கடவுள் என்று கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications