Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு பிறகு சினேகன் ரொம்பவே மாறிவிட்டார்...உண்மையை உடைத்த கன்னிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கன்னிகா தன்னுடைய கணவர் சினேகனைப் பற்றிய உண்மைகளை கூறியிருக்கிறார்.

பாடலாசிரியராக பலருக்கும் தெரிந்த சினேகனின் மறுபக்கம் தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

இவ்வளவு திறமைகளா

இவ்வளவு திறமைகளா

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் கன்னிகா ரவி தன்னுடைய காதல் கணவரான சினேகன் பற்றி தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா ரவி அடிக்கடி தன்னுடைய கணவர் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தான் அதிகமாக பேசி வருகிறார். கன்னிகாவிற்குள் பல திறமைகள் மறைந்து இருக்கிறது. அவர் ஒரு சமூக ஆர்வலராகவும், நடிகையாகவும், மாடலாகவும், அழகி பட்டம் பெற்ற மாடலாகவும், புத்தக எழுத்தாளராகவும், சமையல் ஆர்வலராகவும் பல்வேறு திறமைகளை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் கன்னிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அடிக்கடி பேசும் வார்த்தைகள்

அடிக்கடி பேசும் வார்த்தைகள்


சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான கன்னிகா திருமணத்திற்குப் பிறகு மீண்டும் தற்போது வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் பாடலாசிரியர் சினேகன் உடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகு அதிகமான ரசிகர்கள் இவரிடம் சினேகனைப்பற்றி கேள்விகளை எழுப்பி வருகிறார்களாம்.
அது மட்டுமல்லாமல் சினேகன் மற்றும் கன்னிகா இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அதைப் பற்றியும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் தன்னுடைய கணவர் திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமாக மாறிவிட்டார் என்று கன்னிகா கூறியிருக்கிறார்.

இது வேற நடந்து இருக்கா

இது வேற நடந்து இருக்கா

கிராமத்திலிருந்து கன்னிகா சென்னையில் நடிகை ஆகவேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த புதிதில் அவருக்கு அனைத்துமே புதுமையாகத் தான் இருந்திருக்கிறது. இவருக்கு திறமைகள் இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஒரு நண்பராகவும் வெல்விஷராகவும் இவருக்கு இருந்தது சினேகன் தானாம். தற்போது வரைக்கும் கன்னிகாவிற்கு ஒரு பாதுகாவலராகவும் நண்பராகவும் தான் இருந்து வருகிறாராம். பல விஷயங்கள் கன்னிகாவிருக்கு எடுத்துக்கூறி இந்த சமுதாயத்தில் வாழும் அளவிற்கு மாற்றி இருக்கிறாராம். யாரிடம் எப்படி பேச வேண்டும் பழக வேண்டும் என்பன பற்றி பலமுறை பாடம் எடுத்திருக்கிறாராம். ஒரு சில நேரங்களில் இவர் செய்யும் சிறு சிறு தவறுக்காக திருமணத்திற்கு முன்பே கன்னிகா சினேகனிடம் அடியும் வாங்கி இருக்கிறாராம்.

மாறிய குணம்

மாறிய குணம்

திருமணம் முடிந்த பிறகு சினேகன் ரொம்பவே மாறி விட்டாராம். அவருடைய கேரக்டரில் அமைதி அதிகமாக இடம்பிடித்துக் கொண்டது என்று கன்னிகா மட்டுமல்லாமல் சினேகன் உடன் பழகிய பல நண்பர்களும் இதே தான் கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எதற்கும் கோபப்படும் சினேகன் தற்போது கோபத்தை அதிகமாக குறைத்துக் கொண்டது கன்னிகாவிற்க்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கன்னிகாவை ஒரு குழந்தை போல தான் சினேகன் பார்த்து வருகிறாராம். தெரியாத பல விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்து கன்னிகாவை பார்த்து பார்த்து காதலித்து வருகிறாராம். இதனால் கன்னிகா அதிகமாக மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+