பிக் பாஸ் தாமரைச்செல்வி ஆசைப்பட்டது நிறைவேறி விட்டதாம்.. இது வேற லெவல் வளர்ச்சிதான்..!!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட தாமரை செல்வியின் ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறதாம்.
தாமரை செல்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது திரைப்படத்தில் நடிப்பதை பற்றி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
திறமைக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான் என்று தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பிக் பாஸில் அறிமுகமாகும் ஜீ தமிழ் சீரியல் நடிகை..பலர் பற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும் போல
திறமைக்கு எப்போதுமே மவுசு தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பலருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நம்பி தான் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த மாதிரி ஒரு நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது. ஒரு சிலர் அதற்கு முன்பு இருந்த பெயரையும், புகழையும் கூட இந்த நிகழ்ச்சியில் இழந்து விடுகிறார்கள். ஆனால் திறமை இருக்கும் ஒரு சிலர் இதற்கு மேலே முன்னேறி விடுகிறார்கள்.
ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் பல போட்டியாளர்கள் இதற்கு முன்பு பலருக்கும் பரீட்சையும் இல்லாத புது முகமாக இருந்தனர். அதில் ஒருவராக தாமரை செல்வி இருந்து வந்தார். இவர் நாட்டுப்புற கலைஞராக ஒரு சிலருக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். இவருடைய கேரக்டர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இவருக்கு ஐந்தாவது சீசனில் கிடைத்த ஆதரவின் காரணமாக தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தது.
தாமரை செல்வியின் ஆசை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக தான் தாமரை செல்வி இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கணவரோடு ஆட்டம் போட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திரைப்படத்தில் நடிப்பதாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தனக்கு திரைப்படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக தாமரை செல்வி கூறியிருந்தார்.
குவியும் வாழ்த்துக்கள்
திரைப்படங்களில் காமெடி கேரக்டராகவோ அல்லது அக்கா, தங்கை கேரக்டர் கிடைத்தாலும் எனக்கு போதும் என்று கூறியிருந்தார். அப்போது கூட இவரோடு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த வருண் சீக்கிரம் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார். அதுபோல தற்போது இவர் நடிகர் சிங்கம்புலி மற்றும் ரோபோ சங்கர் ரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மூவி ஷூட்டிங் என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.