Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் ஃபேன்ஸ் அப்பவே சொன்னாங்க...கதறிய பிரியங்கா..ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தன் ரசிகர்கள் சொன்னதைக் கேட்கவில்லை என பிரியங்கா வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.

கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்த பிரியங்கா தற்போது வேதனையோடு பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இனியாவது விளையாட்டை விளையாட்டாக நினைத்து விளையாடுவாரா?? என நெட்டிசன்கள் ஒருபக்கம் கலாய்த்து வருகின்றனர்.

திடீர் என்ட்ரி

திடீர் என்ட்ரி

தொகுப்பாளராக அறிமுகமாகி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி இருக்கும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இவர் வர மாட்டார் என பலர் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவருடைய என்ட்ரி அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தது. ஆனாலும் வந்தபிறகு கலகலப்பாக எப்போதும் போல இவர் இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் தான். தொகுப்பாளராக இருப்பதற்கும் தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என பலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவு

ரசிகர்களின் ஆதரவு

ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி இருந்ததை பார்த்த ரசிகர்கள் முன்பு உள்ள சீசன் களை விட வித்தியாசமாக இருக்கும் என ரொம்பவே எதிர்பார்த்து இருந்தனர். காரணம் கலகலப்பான பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் இருப்பதால் தான். ஆனால் டாஸ்க் தொடங்குகின்ற வரைக்கும்தான் கலகலப்பு எல்லாம் இருந்தது தவிர தொடங்கியதும் எல்லாம் மாறி போய்விட்டது என பலர் கூறி வருகின்றனர். ஆனால் இவருடைய தீவிரமான ரசிகர்கள் அவரவருடைய கேரக்டரில் சிறப்பாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் ரசிகர்களின் பார்வையில் தான் வேறுவிதமாக இருக்கிறது என்று பலர் கொந்தளித்து வருகின்றனர்.

எலிமினேட்டானான அபிஷேக்

எலிமினேட்டானான அபிஷேக்

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா முதலில் யாருடனும் சேர்வதற்கு முன்பு வரைக்கும் ஜாலியாக இருந்தார். ஆனால் அபிஷேக் மற்றும் நிரூப்புடன் இருக்கும்போது இவருடைய கேரக்டர் மாறிவிட்டது என பல குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் அபிஷேக் வெளியேறிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிரியங்காவிருக்கும் பேரிழப்பாக தான் இருந்திருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அபிஷேக் உடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர் நாட்கள் செல்ல செல்ல தம்பியாகவும் சக நண்பனாகவும் மாறிவிட்டார். இதனால்தான் அபிஷேக்கின் எலிமினேஷன் பிரியங்காவை ரொம்பவே பாதித்து வி

ரசிகர்களை நினைத்து ஃபீலிங்

ரசிகர்களை நினைத்து ஃபீலிங்

தொகுப்பாளர் என்றாலே ஒரு சிலர் முகம் தான் நினைவிற்கு டக்கென்ற வரும். அந்த வகையில் பிரியங்காவும் ஒருவர்.

ஆனால் தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என பலர் கூறிக் கொண்டிருக்கும் போது நேற்றைய எபிசோட்டில் கமல் இவர் செய்த நிறை குறைகளை எடுத்து காட்டிவிட்டார். இதனால் இவர் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். அந்த நேரத்தில் தான் தனது அம்மாவையும் நினைத்து அழுது கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரசிகர்கள் எவ்வளவோ சொன்னார்கள் பிக் பாஸ் போக வேண்டாம் என்று ஆனால் நான்தான் கேட்காமல் வந்துவிட்டேன். ...என இவர் அழுவதை பார்த்து இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+