"வாய்யா வீரா" .. இந்த லாக் டவுனில் இப்படி .. கருப்பு புடவையில் ஜில் ஜில் ரவீனா!
சென்னை: ஒரு வருடத்திற்குள் இவ்வளவு வித்தியாசமா என பார்க்கும் ரசிகர்களை ஷாக்காக்கியிருக்கிறார் நடிகை ரவீனா தாஹா.
கண்ணாடி புடவையில் சூம் பண்ணாமலே உள்ளிருக்கும் அழகை வளைந்து நெளிந்து காட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் ரவீனா தாஹா..
அழகு கொஞ்சும் இயற்கையா.. இளமை ததும்பும் தர்ஷாவா.. எதை ரசிக்க.. குழம்பிய ரசிகர்கள்!
ரவீனாவிந் லேட்டஸ்ட் வீடியோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்காக வலம் வருகிறது.
புதிதை விரும்பும் ரசிகர்கள்
மனிதர்கள் அனைவருமே புதியதை தான் அதிகமாக விரும்புவார்கள். புதுசு புதுசாக அறிமுகம் ஆகும் அனைத்தையும் ரசித்துப் பார்க்க வேண்டுமென ஆசைப்படுவது அனைவருடைய இயல்புதான் அதுபோல தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் போட்டோ ஷூட்டினை கதாநாயகிகள் பலரும் மனம் கவர்ந்து அதில் புதுசு புதுசாக தன்னுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்.
மெளன ராகம் சீரியல்
அது போல தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் கதாநாயகி சக்தியாக கலக்கிக் கொண்டிருக்கும் ரவீனா டாடாவும் போட்டோஷூட்டில் படு பிசியாக பார்ப்பவர்களை பதற வைத்து வருகிறார். பொதுவாக சீரியல் என்றாலே அதில் கதாநாயகிகள் எல்லாமே வீட்டில் இருக்கும் பெண்கள் ரசிக்கும் நடிகைகளாகத்தான் இருந்து வருவர் .
இல்லத்தரசிகளுக்காகவே
குடும்ப தலைவிகளுக்கு தகுந்த மாதிரிதான் சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் தற்போது மௌனராகம் சீரியலில் மூலமாக இளைஞர்களை வசியப்படுத்தும் இளம் கதாநாயகி அறிமுகமாகி இருப்பதால் இந்த சீரியல் விறுவிருப்பாக அனைவரையும் கவர்ந்து இழுத்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் கல்லூரி இளைஞர்களும் வீட்டிலிருந்து சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .
குழந்தை டூ க்யூட் நாயகி
அவர்களும் இந்த சீரியல் கதாநாயகி மேல்தான் ஒரு கண்ணை வைத்து சுற்றி வருகின்றனர் .இவருக்காகவே இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ரவீனா அறிமுகமானது என்னவோ ராட்சசன் திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது வரையிலும் இவருடைய கேரக்டரை தான் அந்தப்படத்தின் முக்கியமான கேரக்டராக இருந்துவருகிறது.
கடைக்குட்டி வேடத்தில் கலக்கல்
அதனாலேயே இவரை பலரும் கமெண்ட்களில் அந்த கேரக்டரின் பெயரை சொல்லி அழைத்து வருகின்றனர் .ஆனாலும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் அமைந்திருந்தது. இந்த சீரியலில் வீட்டின் கடைக்குட்டி குழந்தையாக கலக்கி இருப்பார் .பொதுவாக வீட்டின் கடைசி பிள்ளைக்கு இருக்கும் அதே சேட்டைகளையும் இவர் தன்னுடைய நடிப்பினால் கொண்டு வந்திருப்பார்.
காதலுக்கு எதிரியாக
ஆனால் அந்த சீரியலில் முதலில் மீனாட்சிக்கும் சுந்தருக்கும் இடையில் இருக்கும் காதலுக்கு இவர்தான் எதிரியாக இருந்து வீட்டில் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதால் சீரியல் ரசிகர்கள் இவரை திட்டி கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். ஆனால் அவர் நிஜத்தில் நான் அப்படி எல்லாம் இல்லை கதைக்காகத்தான் அப்படி நடித்திருந்தேன் என கூறி இருந்தாலும் ரசிகர்கள் விடுவதாயில்லை .தற்போது இவரை அந்த சீரியலில் காணவில்லை என்றாலும் குழந்தையாக இருந்த இவர் குமரியாக விஜய் டிவியில் தஞ்சம் புகுந்து விட்டார்.
ஹோம்லி பொண்ணு
விஜய் டிவியில் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் உண்மையிலே இந்தப் பொண்ணு இப்படித்தான் ஹோம்லியான பொண்ணா என நினைக்கும் வகையில் படு பவ்வியமாக நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் .ஆனால் அது எல்லாம் சீரியலில் மட்டும்தான் நிஜத்தில் நான் செம வாலு என இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி நிரூபித்து கொண்டிருக்கிறார் .
கருப்பு சேலையில் குத்தாட்டம்
அதுவும் தற்போது கருப்பு கலர் புடவையில் குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்கள் ஜொள்ளு வடிய விட்டிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் காண்டான நெட்டிசன்கள் என்ன மீண்டும் புடவையில் தரிசனமா தாங்காது பாடி என கலாய்த்து வருகின்றனர் .ஏற்கனவே இவர் போன ஊரடங்கு நேரத்தில் கறுப்பு கலர் புடவையில் ஜோதிகாவிற்கு டப் கொடுக்கும் வகையில் வீடியோஸ்கள் வெளியிட்டுள்ளார்.
வைரல்
இந்த வீடியோக்களால் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பிரபலமாக மாறி விட்டதால் அவர்கள் கலாய்த்த கலாய்ப்பினால் செம வைரலாக மாறிவிட்டார் .ஆனால் அதேபோல தற்போது மீண்டும் புடவையில் வந்து இறங்கியதும் துள்ளி குதித்த நெட்டிசன்கள் தங்களால் முடிந்த அளவுக்கு கமெண்ட் களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.