பிக் பாஸில் விஜய் டிவி சீரியல் நடிகை.. அதை மட்டும் செய்ய மாட்டேன்..!! அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகி நேஹா கவுடா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னட பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தான் புது அனுபவத்தை பெற போவதாக மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

சன் டிவியில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் மூலமாக பலருக்கும் பரீட்சையமான நேஹா கவுடா அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு instagram மூலமாக இவர் தகவல் தெரிவித்து இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக தான் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்று பலரும் கூறி இருந்தனர். அதற்குப் பிறகு இவருக்கு பதிலாக இதே சீரியலில் கன்னிகா நடித்து வந்தார்.

பிக் பாஸில் அறிமுகம்
திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சில ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியல் முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் அடுத்து இவர் என்ன செய்யப் போகிறாரோ? ? என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறி இருந்தார். தற்போது தமிழ் பிக் பாஸ் ஒளிபரப்பாக போவதால் பலரும் அவர் தமிழில் தான் களமிறங்க போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவர் கன்னடா பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நேஹாவின் பதில்
நேஹா கவுடா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு தான் உள்ளே சென்றுள்ளார். உள்ளே யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன், என்னுடைய வேலையை நான் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறேன்.
நான் எப்போதுமே அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. அதுபோல இங்கே கேட்டு அங்கேயும், அங்கே கேட்டு இங்கேயும பேசும் பழக்கம் எனக்கு கிடையாது. பல அழகான நினைவுகளை பிக் பாஸ் வீட்டினுள் சேகரித்துக் கொள்ளப் போகிறேன். நெகட்டிவ் ஆகவோ அனாவசியமாகவோ யாரிடமும் பேச மாட்டேன் என்று கூறிக் கொண்டுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய எபிசோடுகள் ஒளிபரப்பாக தொடங்கி விட்டது. இந்த நிலையில் இவர் எந்த மாதிரி இந்த வீட்டிற்குள் இருக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது போகப் போக தெரியும். சீரியலில் இவரை அமைதியாக பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இவருடைய கேரக்டரை பார்க்க முடியும் என்றெல்லாம் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications