பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறும் பிரபலம்.. அடுத்து வரப்போறவர் இவர் தானா! காரணம்?
சென்னை: ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் விரைவில் வெளியேற இருப்பது செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
உலகமெங்கும் ரசிகர்கள் கொண்டாடும் ரியாலிட்டி நெகிழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இனி அடுத்த சீசனில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

ரியாலிட்டி ஷோ
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆதரவை பிடித்திருக்கிறது.ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. இது தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளான தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோ என்று பெயரை பெற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

பிறமொழி பிக் பாஸ்
போட்டியாளர்களைப் போலவே தொகுப்பாளர்களும் முன்னணி நடிகர்களாகவே பிரபலமானவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் தான் இந்த நிகழ்ச்சி அந்தந்த மொழிகளில் ரசிகர்களின் மத்தியில் நன்றாக கவரப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது தெலுங்கில் ஆறாவது சீசனும் ஹிந்தியில் 16வது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் நாகார்ஜுனாவின்
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க ஒளிபரப்பாகிறது. தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர்,இரண்டாவது சீசன் நானி என தொகுத்து வழங்க பின் அடுத்தடுத்து மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என தொடர்ச்சியாக நான்கு சீசன்களை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் அடுத்த ஏழாவது சீசரை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை இத்தோடு வெளியேறுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த சீசனில் இவர்தானாம்
நடிகர் நாகார்ஜுனாவுக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்த்து வருவார்கள். அப்படிப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு நாகார்ஜுனாவின் திடீர் முடிவு கொஞ்சம் ஷாக்கிங்காக தான் இருக்கிறதாம். அது மட்டும் இல்லாமல் அடுத்த சீசனை விஜய தேவர் கொண்டாவை தொகுப்பாளராக களம் இறக்க சீரியல் குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications