கேரளா தேர்தல்: 40 ஆண்டுகளுக்குப் பின் சரித்திரம்-மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி.. பரபர கருத்து கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் போல கேரளாவிலும் சட்டசபை தேர்தல் களை கட்டியுள்ளது. 140 இடங்களைக் கொண்ட கேரளா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏசியாநெட் நியூஸ்-சிபோர் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.
இக்கருத்து கணிப்பில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 72 முதல் 78 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும்பான்மைக்கு தேவை 71 இடங்கள்.

40 ஆண்டுகளுக்குப் பின்..
கேரளாவில் 1980-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் அல்லது எந்த ஒரு கூட்டணியும் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தது இல்லை. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இடதுசாரிகள் 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து சரித்திரம் படைப்பார்கள் என்கிறது இக்கருத்து கணிப்பு

காங்கிரஸ் அமோகம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியானது 59 முதல் 65 இடங்களில் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 முதல் 7 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்
கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் வரவேண்டும் என 39% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளராக உம்மன் சாண்டி 18% பேரும் சசி தரூருக்கு 9% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு 7% பேரும் காங்கிரஸின் ரமேஷ் சென்னிதாலா, கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோருக்கு தலா 6% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சபரிமலை விவகாரம்
கொரோனா லாக்டவுன் காலத்தில் உணவு தானியங்களை இலவசமாக வழங்கிய கேரளா அரசின் நடவடிக்கைக்கு 34% பாராட்டு தெரிவித்துள்ளனர். 2018-ல் சபரிமலை விவகாரத்தை கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு சரியாக கையாளவில்லை என 34% பேர் கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications