முல்லைப் பெரியாறு மரங்கள்:முதல்வர் ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பால் ஜெகஜோதியாய் எரியும் கேரளா அரசியல்!
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு பேபி அணையில் மரங்கள் வெட்டும் விவகாரம் இன்று கேரளா சட்டசபையில் பெரும் பிரளயமாக வெடித்தது. கேரளா எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் இடதுசாரி அரசை மிக கடுமையாக விமர்சித்தனர்.
பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரளா அனுமதிக்க வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முன்வைக்கும் கோரிக்கை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஸ்டாலின் கடிதம்
இந்த வழக்கு விசாரணையின் போது பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்பது கேரளாவின் வாதம். இந்நிலையில் அண்மையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதித்ததற்கு நன்றி என கூறியிருந்தார்.

சட்டசபையில் விவாதம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கடிதம்தான் இப்போது கேரளா அரசியலை உலுக்கி எடுத்து வருகிறது. கேரளா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இது ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக அதில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சசீந்தரன், அதிகாரிகள் எடுத்த முடிவு எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு தெரியவந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

அமைச்சர் பதவி எதற்கு?
ஆனால் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு வரும் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோரிக்கைக்கு திடீரென அனுமதி கொடுத்ததில் ஏதோ மர்மம் உள்ளது என்றார். எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீஷன் பேசுகையில், கேரளா அதிகாரிகளின் முடிவுகள், முதல்வருக்கும் அமைச்சருக்கும் கூட தெரியவில்லை. ஆனால் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது. உங்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள் எடுத்த முடிவு உங்களுக்கே தெரியாது என்றால் ஏன் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றார். மேலும் கேரளா அரசு அதிகாரிகள் கேரளாவின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் கேரளா அரசின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.

தமிழகத்துக்கு ஆதரவாக கேரளா அதிகாரிகள்
முன்னதாக மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தோம் என்று கேரளா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கேரளா அரசு அதிகாரிகளே, தமிழகத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த பெருநெருப்புதான் இப்போது கேரளா அரசியல் ஜெகஜோதியாய் பற்றி எரிகிறது என்பதையே சட்டசபை விவாதங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications