வாளை ஏந்திக் கொண்டு அணிவகுத்த வி.ஹெச்.பி பெண்கள்! ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கேஸ் போட்ட கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) மகளிர் பிரிவான துர்கா வாஹினியை சேர்ந்த 250 பேர் மீது ஆரியங்கோடு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாள்கள் ஏந்தி ஊர்வலம் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவாக துர்கா வாஹினி உள்ளது. இவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

பயிற்சி வழங்க முடிவு
இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்கடை பகுதியில் உள்ள ஆரியங்கோடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கீழரூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் துர்கா வாஹினியில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கோரினர்.

வாள் ஊர்வலம் சென்ற பெண்கள்
போலீசார் பயிற்சி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து மே 22ல் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதாவது துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி ஊர்வலமாக போனது தெரியவந்தது.

வீடியோவால் சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரிடம் அனுமதி இன்றி துர்கா வாஹினி சார்பில் வாள் ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஏற்கனவே ஆலப்புழாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் இது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சட்டவிரோதமாக கூடியது, ஆயுதம் பயன்படுத்துதல் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். மேலும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் நிகழ்ச்சி ஏற்படாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications