வாளை ஏந்திக் கொண்டு அணிவகுத்த வி.ஹெச்.பி பெண்கள்! ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கேஸ் போட்ட கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) மகளிர் பிரிவான துர்கா வாஹினியை சேர்ந்த 250 பேர் மீது ஆரியங்கோடு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாள்கள் ஏந்தி ஊர்வலம் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவாக துர்கா வாஹினி உள்ளது. இவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

பயிற்சி வழங்க முடிவு
இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்கடை பகுதியில் உள்ள ஆரியங்கோடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கீழரூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் துர்கா வாஹினியில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கோரினர்.

வாள் ஊர்வலம் சென்ற பெண்கள்
போலீசார் பயிற்சி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து மே 22ல் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதாவது துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி ஊர்வலமாக போனது தெரியவந்தது.

வீடியோவால் சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரிடம் அனுமதி இன்றி துர்கா வாஹினி சார்பில் வாள் ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஏற்கனவே ஆலப்புழாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் இது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சட்டவிரோதமாக கூடியது, ஆயுதம் பயன்படுத்துதல் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். மேலும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் நிகழ்ச்சி ஏற்படாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications