வாக்குவங்கி முக்கியமில்லை.. சபரிமலையில் ஒரே நிலைப்பாடுதான்... பினராயி திட்டவட்டம்!
சபரிமலை கோவில் பிரச்சனையில் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் பிரச்சனையில் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இரண்டு முறை சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.
ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.

யாரும் நுழையவில்லை
இதனால் இதுவரை ஒரு பெண் கூட சபரிமலை கோவிலுக்குள் செல்லவில்லை. இது அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தை அம்மாநில முதல்வர் சரியாக கையாளவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

பிடிக்க பார்க்கிறார்கள்
இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து அளித்த பேட்டியில், கேரளாவில் சபரிமலையை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அவர்களுக்கு கேரளாவில் இதுவரை இடமில்லை. அதனால் இப்போது சபரிமலையை வைத்து இடத்தை பிடிக்க பார்க்கிறார்கள். மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள்.

அனுமதிக்க மாட்டோம்
கேரளாவில் மக்களை மதத்தை வைத்து பிளக்க முடியாது. யார் என்ன செய்தாலும் கேரளா மக்கள் ஒன்றாகத்தான் இருப்பார்கள். கேரளா ஒருவேளை மதத்தால் பிளவுபட்டு இருந்தால் பல காலத்திற்கு முன்பே இந்த மாநிலமே இல்லாமல் போய் இருக்கும். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

வாக்கு தேவையில்லை
எங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் தேவையில்லை. சில இடங்களில் சபரிமலை பிரச்சனை காரணமாக நாங்கள் தோல்வி அடைந்தால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் வாக்கு வங்கிக்காக கட்சி நடத்தவில்லை. கேரளாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே முக்கியம். தேர்தலில் தோற்றாலும் கூட, சபரிமலையில் எங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்.
-
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications